Thursday, April 17, 2008

பொம்மரிலு என்ற சந்தோஷ் சுப்ரமணியம்....


தனிமை என்னை கூறு போடும் ஒரு சாராசரி இரவில், இத் தமிழ் புத்தாண்டு இரவயும் தனிமைக்கு காவு கொடுக்க மறுத்து சென்ற ஒரு தெலுங்கு தமிழ் படம்…

பொம்மரிலு என்ற சந்தோஷ் சுப்ரமணியம் ............

எதிர்பார்ப்பின்றி சினிமா செல்வோம் என்ற என் மானசீக குரு அமரர் திரு.ரங்கராஜன் என்ற சுஜாதாவின் கூற்றின் படி திறந்த மனதுடன் நான்…

ஒரு சாதாரண ஆரம்பம்.அசாதாரணமான காட்சி அமைப்புகள்.காதலனும் காதலியும் சந்திக்கும் முதல் காட்சியே இந்த படத்தின் அடிநாதமாக இருக்கும் இளமைத் துள்ளலுக்கு அடையாளம்…படம் முடியும் வரை சந்தோஷமாய்…

கதை: அந்தபுரத்து கூன்டுக் கிளியாய் அந்த ராஜாவின் மகனும், அவன் ஆசைகளும்………
பணக்கார பையன்.ஏழைப் பொண்ணு..இருவருக்கும் காதல்.. மகனின் சம்மதத்தை (எதற்க்கும் )கேட்காமல் நிச்சயம் செய்யும் அப்பா..இதற்க்கு பிறகு மகனுக்கு வரும் காதல், வேறொரு பெண்ணுடன்…

ஏழு நாட்கள் காதலியை காதலன் வீட்டில் இருக்க அப்பா சம்மதிக்க, அவளும் ஏழு நாட்கள் அவனது வீட்டில் தங்கியபோது தான் தெரிகிறது.அவனுக்கும் அவளுக்கும் ஏழாம் பொறுத்தம் என்று…

கதையிம் முதுகெலும்பாய் கதையின் நாயகி ஜெனிலியா டிசோசா.சுட்டித்தனமான முகம், குறு குறுப்பான கண்கள்..
குதித்தெழுந்தோடும் நடை,உடை,பாவனை..கதை முழுவதும் உன்னை சுற்றி உன்னை சுற்றி மட்டுமே…

ஆனால் கஜினியின் அசினும்,ச.சு ஜெனிலியாவும் ஏதோ ஒரு புள்ளியில் சங்கமித்துக்கொண்டே…

வழக்கமான பிரகாஷ் ராஜ், சூப்பர் செல்லம்..
வழக்கமான ஜெயம் ரவி..அரங்கில் ஒரே ஜொள்ளு மழை..

இசை.. வழக்கமான தேவி ஸ்ரி பிரசாத்..உனக்கும் எனக்கும் தாக்கம் ஆங்காங்கே….மாத்துங்க தல…போரடிக்குது…

அட சண்டையே இல்ல படத்துல..

அழகான சாரல் மழையாய் சந்தானம் மற்றும் பலர்..வடிவேலுக்கு ஒரு நல்ல போட்டி..
உஷார் கைப்புள்ள..எட்டி பாருங்க சிம்புத் தேவனும்
இதையே தான் சொல்றாரு…

இந்த கோடை விடுமுறைக்கு ஒரு நல்ல திரைப்படம், எல்லா வயதினருக்கும்..

இயக்குனர் பற்றி…கை எழுத்து நல்ல இருக்கு கார்பன் காப்பியாக இருந்தாலும்..
சுயமாக ஏதாவது முயற்சி பண்ணுங்க ராஜா சார்…

படம் முழுவதும் மயிலிறகால் மனம் வருடும் காட்சிகள் ஆங்காங்கே….
உணற்ச்சிப் பூக்களாய், அழகான புன்னகையாய், திரைப் படம் முடிந்து வரும் எல்லோர் முகத்தில் தெரிவது போல….

1 comment:

Anonymous said...

padam paarthean.... santhosh valarppu ennoda valarppai thaan nyabaga padiyirunthathu....

So, wanted to convey my father that I wanted to be myself...

Veetla, solli oru date ready vaangi..ticket vaanga kilambinean..."Enga pora?", appa stop panninaaru...

"Ticket vaanga", ennoda bathil.

Appa, "Ticket naan reserve panna solliyirukkean..naalaikku vandhidum...nee ready-aa irundha poathum"..... Ippadi oru bathil....

Enakkul oru thani sirippinu solratha illai ekkamnnu solrathannu theriyalai.... Appadi oru glass water kudichu, appa sonna vaarthaigala digest panna try panninean...

பார்த்ததில் பிடித்தது....