சபதம்…

துறுதுறுக்கும் கண்கள்
இழுத்து தைத்தது போன்ற தோல்- தொட தூண்டும்
சிரிக்கும் போதும் மட்டுமல்ல
எப்போதும் ...............

அழகிய ஓசை பள்ளத்தாக்காய்
அந்த கன்னக்குழி
தாவத்துடிக்கும் மனதுடன் நீ…

ஒவ்வொரு தடவையும் தோற்றுத்தான் போகிறேன்
குழந்தையை தாங்கி நிற்கும் பெண்ணைத் தவிர்த்து
அந்த குழந்தையய் மட்டும் பார்க்க வேண்டும்
என்ற சபதத்தில் இருந்து……

Comments

Popular Posts