கோ.. வி.. தா.. ப.. ம்……. பாகம் ---7
என் சகதர்மினிக்கு ………-------------------------------------------------------------------------
எத்தனை இரவுகள்….எத்தனை இரவுகள்….
எங்கே போனது எந்தன் இரவுகள்….
எத்தனை இரவுகள்….எத்தனை இரவுகள்….
எஞ்சி இருப்பது எத்தனை இரவுகள்….
எத்தனை இரவுகள்….எத்தனை இரவுகள்….
விடிந்து போனவை எத்தனை இரவுகள்….
எத்தனை இரவுகள்….எத்தனை இரவுகள்….
விடியாமல் போனவை எத்தனை இரவுகள்….
--------<>-----------
என்னை வென்று சென்றவளின்- வெற்றிக்கு
அவள் தகுதியானவள் தான்..-எனெனில்
தோற்றது நான்….-பெருமைப் படுகிறேன்
இந்த தோல்விக்காகவும்
அந்த வெற்றிக்காகவும்……
--------<>-----------
I Know What Know _ But
I don’t know what I don’t know
--------<>-----------
நடு முதுகுக்கு நடுவில் _ கைக்கெட்டா தூரத்தில்
அந்த அழகான அழுக்கு ஒட்டிக் கொன்டிருக்கிறது
(நடு முதுகு மச்சம் நல்லதுடா-அம்மாவின் குரல் அடுப்படியிலிருந்து…..)
காத்துக் கொன்டிருக்கிறோம்
நானும்_ அந்த அழுக்கும்
நீ வந்து முதுகு தேய்த்து விடும்_ நன் நாளை நோக்கி
--------<>-----------
உணவு எடுக்க வரும் எல்லா
சிறு மீன்களையும் விரட்டுகிரது- சட்டாம்பிள்ளை
அந்த கறுப்பு தேவதை
கொன்று விடட்டுமா என்ற கேட்டதற்க்கு
வேண்டாம் என்கின்றன இந்த குட்டி மீன்கள்..
நீ யார் பக்கம் என் சகதர்மினி…?
--------<>-----------
எல்லா கவிதைகளையும்
ஒன்றன் பின் ஒன்றாக
ஒரே மொழியில்
இருக்க வேன்டுமா என்ன…?
Snapshots
postmodernism
surrealism
Montage
Collage
Modern Art _ வரிசையில்
இதோ என் கோவிதாபம்..
புரிந்தவர்கள் சிந்தியுங்கள் அமைதியாய்…….
புரியாதவர்கள் பாராட்டி பேசுங்கள் சத்தமாய்…
எந்த கருத்துமின்றி வாசகனாய் _ நான்
வெளி இல்லா வெளி ஆளாய்….
பார்வையாளனாய் வேடிக்கை பார்ப்பவர்களை பற்றி
எனக்கு கவலை இல்லை……
“Hope you are not the One”
--------<>-----------
இளைப்பாற வேன்டும் _ சிறிதே
நீயும் சற்று உலர்ந்தெழு..
மற்றொறு நாள் சந்திப்போம்
மலர்ச்சியாய்…..

Comments