எழுத்தாளனாகிய நான்….

எப்போதும் யாரோ- உடைந்த
சிலேட்டில் கவிதை எழுதி
கண் முன் காட்டுவதைப் போல..
கை பிடித்து-கையில் பேனா பிடித்து
காதலியின் வாஞ்சையுடன்
குருவின் ஆசியுடன்
யாரோ எழுதிச் செல்வதைப் போல….
அழகான கருவை - எழுதி முடிக்குமுன்
இறந்து போன அற்ப ஆயுசு கவிஞனின்- ஆவி
என்னுள் புகுந்து எழுதுவதைப் போல- பயமாய்
ஆனால் கையெழுத்து தெளிவாய்………..
மொத்தத்தில் என்
எல்லா கவிதைகளையும் - நான் எழுதாமல்
யாருடையதாகவோ...
மாற்றான் மனைவியாய்…..
எப்போதும் அழகாய்
அடுத்த வீட்டு குழந்தையாய்
எட்டி நின்று பார்க்கத்தான் முடிகிறது….
இந்த கவிதையும் சேர்த்து….
ஆனாலும் எழுதிக் கொண்டிருக்கிறேன்
நிறுத்த முடியாமல் வசியத்திற்க்கு கட்டுப்பட்டது போல…..


Comments