எழுத்தாளனா(க்)கிய நான்….


எப்போதும் யாரோ-உடைந்த
சிலேட்டு பலகையில் கவிதை எழுதி
கண் முன் காட்டுவதை போல ………..

கை பிடித்து
கையில் எழுது கோல் பிடித்து
காதலியின் வாஞ்சனையுடன்
குருவின் ஆசியுடன்
யாரோ எழுதிச் செல்வதைப் போல………

அழகான கருவை எழுதி முடிக்கும் முன்
இறந்து போன அற்ப அயுசு கவிஞனின்-ஆவி
என்னுள் புகுந்து எழுதுவதைப் போல….
பயமாய்-ஆனால் கையெழுத்து தெளிவாய் கிறுக்காமல்….

என் எல்லா கவிதைகளையும் _ மொத்தத்தில்
நான் எழுதாமல் யாருடயதாகவோ…….
மாற்றான் மனைவியாய் _ எப்பொழுதும் அழகாய்…
அடுத்த வீட்டு குழந்தையாய்
எட்டி நின்று பார்க்கத்தான் முடிகிறது….

இந்த கவிதையையும் சேர்த்து _ ஆனாலும்
எழுதிக்கொன்டு இருக்கிறேன்
நிறுத்த முடியாமல்…..

மனுஷம்

Comments

Afiya said…
First of all I would like to tell you, your blog looks simply superb enhanced by those Abstract & natural photography and poems express its pain, expectation and disappointments. Anyway as I always tell you, Keep writing and publish not only in your blogs but also in some magazines.