குடுகுடுப்பைக்காரன் என்ற பிள்ளை பிடிப்பவன் ......................................கோ.. வி.. தா.. ப.. ம்……. பாகம் ---6

பிள்ளை பிடிப்பவன்.....
யாருக்கு தெரியும் - பிள்ளை
பிடிப்பவன் எப்படி இருப்பன் என்று..
சின்னஞ்சிறு வயதில்
எனக்கு ராச் சோறு ஊட்டியதில்
அந்த குடுகுடுப்பைக்காரணுக்கும்
பெரும் பங்கு உண்டு-பிள்ளை பிடிப்பவன் என்ற போர்வையில்
கருப்பு நிறத்தில் சிவப்பு கரையுடன்….
------<>-------
முறுக்கு மீசையும்
பிள்ளையார் தொப்பையும்
கிழட்டு மாடும்-அதன் மேல்
பழயதாய்
அழியாத மெருகுடன்
கண்ணாடி ஆடையுமாய்-செத்துப் போன
மாட்டின் தோலில் செய்த செருப்பும்
குடு குடு பை யுடன் - பெயற்க்காரணமாய்…
------<>-------
இராத்திரி வேளையில்…
அந்த வயதில்
அவன் வருகைச் சத்தம் கேட்கும் போது - என்னை
கடத்தி சென்று
இரண்டு கண்ணில் கரப்பு கட்டி- குருடனாக்கி
மூலதனமில்லா வியாபாரத்திற்க்கு
என்னை அழைத்து செல்வது போல……
இது தான் பிள்ளை பிடிப்பவன் என்ற
குடுகுடுப்பைக்காரன் பற்றி
என் மனதில் இன்றும்….
------<>-------
சிகப்பு தோலும்
வட்ட முகமும்
முத்து பல் வரிசையும்
மதிப்பு மிக்க ஆடைகலும்
நுனி நாக்கு ஆங்கிலமும்
ஐந்து இலக்க சம்பளமும்
நறுமண கவசமும் - அணிகலன்கலாய்……………
------<>-------
முற்போக்கு இலக்கியமும்
நவீன திரைப் படங்களும் – இதன்
தொழில் நுட்பங்களும்,
ஒளிப்பதிவும்
ஓவியமும்
பின் நவீனத்துவமும்
நாடக பரிச்சயமும்
எழுத்தனுபவமும்
பெண்மை குறித்த பார்வையும்
இவை எல்லாம் கலந்த பேச்சும் - ஆயுதமாய்……..
------<>-------
கற்றவற்றையும்
பெற்றவற்றையும் கலந்து
இப்படி எழுதும் கவிதைகளும்
என் முப்பத்தி இரண்டு வயது
இளமையும் - என் வாகனமாய்.....
------<>-------
ஒரு மாயாவியைப் போல
தோல் செருப்பு உதவியுடன் ஒலி எழுப்பி
எதிர் கொள்வோர் - மனம் அதிர
நடந்து….. நடந்து….. நடந்து….. நடந்து….. நடந்து…..
------<>-------
வயதிற்க்கு வந்த மகளின் அப்பாவிற்க்கும்
சமீபத்தில் திருமணமான என் தோழியின் கணவருக்கும்
அழகான தோழியர் உள்ள என் தோழிகளுக்கும்
இரண்டு குழந்தைகளுக்கு தாயான - என்
அண்ணியின் கணவருக்கும்
------<>-------
ஒரு மாயாவியைப் போல
தோல் செருப்பு உதவியுடன் ஒலி எழுப்பி
எதிர் கொள்வோர் - மனம் அதிர
நடந்து….. நடந்து….. நடந்து….. நடந்து….. நடந்து…..
------<>-------
வயதிற்க்கு வந்த மகளின் அப்பாவிற்க்கும்
சமீபத்தில் திருமணமான என் தோழியின் கணவருக்கும்
அழகான தோழியர் உள்ள என் தோழிகளுக்கும்
இரண்டு குழந்தைகளுக்கு தாயான - என்
அண்ணியின் கணவருக்கும்
சில அழைப்புகளை மறுக்க முடியாமல் விருந்தாளியாகி
சில நாட்கள் குலவியதற்க்கு பின்
என்னுள்ளும்
இப்போதெல்லாம்
முறுக்கு மீசையும்
பிள்ளையார் தொப்பையும்
கிழட்டு மாடும்
குடு குடு பை - யுடன்
கண்களை குருடாக்க கை நிறைய கரப்புமாய்…..
நானும் ஒரு பிள்ளை பிடிப்பவனாய்
எனக்கே தெரியாமல்….
------<>-------
மனுஷம்
21-01-02
நாகர்கோவில்


Comments
ungal kavithayaal naanum ippothu sila nimidangal siru vayathu paalakanaanen.....
nandrikal pala... thangalukku