திருமணம் பற்றி என்னுள்லும், நானும்...........


இளமை மறைந்து
இனிமை மறந்து
நினைவு மருத்து
உலகம் புரிந்து
வாழ்க்கை தெளிந்து
முதுமையில் மூச்சிறைத்து
திரும்பி பார்க்கும் போது ....
ஆதரவாய் தலை சாய தோள் கொடுக்க வேண்டும் ஒரு துணை - வாழ்க்கை துணை....

ஆணவம்
அகம்(-) பாவம்
நான்....
எனக்காக.....
எனக்கு மட்டும்......
இது எல்லாவற்றையும் விட்டு கொடுத்துத்தான் பாரேன்......?
உனக்கு பிடித்த எதிர்பால்நிடத்தில்..

வாழ்க்க துணை என்ற போர்வையில்....
திருமணம் என்ற கயிறு கட்டி.....
மூச்சு முட்டும் வரை. .....

துணை - எப்போதும் சுகம் தான்
வாழ்க்கை துணை முதல்
வழித் துணை வரை- நான்கு பேர் என்றாலும்..

மனிதன் எவ்வளவு உயர்ந்தாலும் -
எப்போதும் வெற்றி என்னவோ இயற்கைக்குத்தான்.
சங்கமமே இயற்கை....
சங்கமம் என்பது முற்றுப்புள்ளி அல்ல...
ஒரு பெரிய கோட்டின் முதல் புள்ளி.....

வா சங்கமிப்போம் - இந்த சமுதாயத்தில்
உனக்கான ஆடவனோடும்,
எனக்கான பெண்மணியோடும்.........
மரணம் கூட சுகமானது
உன்னுள் என்கோபம்..
ஆணவம்..
அகம்பாவம் எல்லாவற்றையும் கொன்று(தற்கொலயாய் இருப்பினும் .....)
புதைக்கும்போது........


மரணம் கூட சுகமானது ....
திருமணம் பற்றி என்னுள்லும், நானும்...........

மனுஷம்

Comments

Known Stranger said…
i think you would enjoy every moment of marriage life. Insha allaha