கழுதயொ................
குதிரயொ....................................
ஏதோ ஒரு பொண்ணு......
சீக்கிரம் கல்யாணத்த முடிங்க ......
சமீபத்தில் எனக்கு கிடைத்த திருமண அறிவுரைகளில் ஒன்று....
உறக்கமில்லா நடுநிசிகளில் தேவைப்படுகிறது......................
அழகான,
அறிவான,
புத்திசாலியான
எனக்கான பெண்ணல்ல.....
கழுதயொ................
குதிரயொ....................................
-------------------------------------------------------------
முன் இருக்கைப் பெண்ணொருத்தி -சற்று
முன் தன் கைக்குழைந்தைக்கு
கொடுத்த தாய்ப் பால் வாடை பாடம் புகட்டி செல்கிறது.....
இந்த வயதில் நான் இழந்து கொண்டிருக்கும் தந்தை- துவைத்தை
தேவை, கழுதயொ................
குதிரயொ...............................
---------------------------------------------------------------------
திருமயிலை திருக்கோவில்
தினம் ஐந்து நெய் விளக்குகள்
பதினாறு சுற்றுகள்
நாற்பத்து எட்டு நாட்கள்
இன்றோடு முப்பத்தி மூணாவது நாள்
பாவம் தெய்வமும், அம்மாவும்.
தேவை, கழுதயொ................
குதிரயொ...............................
---------------------------------------------------------------------------
எங்கே பார்ப்பது பெண்ணை - முதல் சந்திப்பில்... ?
முகத்தை மட்டும், ............. முகம் தவிர .........
இடை மட்டும் ...........இடை தவிர.........
பாதம் மட்டும்............. பாதம் தவிர........
எங்கே பார்ப்பது.......... பெண்ணை முதல் சந்திப்பில்..?. -
தேவை, கழுதயொ................
குதிரயொ...............................
--------------------------------------------------------------------------
படிக்கட்டு முகட்டில் தொட்டுச் சென்ற
முகம் தெரியாப் பெண்ணின் கைச் சூடு.....
இரு சக்கர வாகனம் ஓட்ட விடாத
பின்னிறுக்கை பெண்ணின் உடல் சூடு...
ஒளித்து வைத்து படித்த புத்தகத்து
கதா நாயகியின் பெரு மூச்சுக் காற்றின் சூடு......-
தேவை, கழுதயொ................
குதிரயொ...............................
----------------------------------------------------------------------
மென் பொருள் வல்லுணரோ
வங்கி அதிகாரியோ
கல்லூரி ஆசிரியையோ
அரசு அதிகாரியோ
பள்ளி ஆசிரியாரோ
பத்தாவது படித்தவறோ
எழுத படிக்க தெரியுமோ......-
தேவை, கழுதயொ................
குதிரயொ...............................
------------------------------------------------------------------------
உங்களுக்கும் தெரிந்தால் சொல்லுங்கள்- புண்ணியம்
உங்கள் வாரிசு களுக்கு.....................
ஒரு மணப்பெண் எனக்கு....
படித்த பெண் வேண்டாம்....
வேலைக்கு செல்லும் பெண் வேண்டாம்...
நல்ல குடும்பம் வேண்டாம்...
ஒழுக்கம் வேண்டாம்..
அழகு வேண்டாம்.....- கண்டிப்பாக
தேவை, நல்ல கழுதயொ................
நல்ல குதிரயொ...............................
ஆசையன்15-09-07