Sunday, April 26, 2009

வெண்ணிலா கபடிக் குழு…



வெண்ணிலா கபடிக் குழு…


திருட்டு வட்டத் தகடு பார்த்து விமரிசனம் எழுதும் இந்த தலைநகரத்து தமிழனை என் தமிழ்த் தாயும், தமிழ் திரையுலகமும் மன்னிக்கட்டும்…

என்னை மன்னிப்பவர்களுக்காக மட்டும் இத்திரை விமரிசனம்
…………….

கதை என்ன..?

ஒரு சாதாரன கிராமத்து இளைஞனுடைய வாழ்க்கை.. ஒரு திருவிழாவில் அவன் சந்திக்கும் ஒரு அழகான யுவதியுடனான காதலும்..அவன் சார்ந்திருக்கும் வெண்ணிலா கபடிக்குழுவுமாக பயணிக்கிறது கதை..

விளையாட்டு படம் என்றவுடன்..லகான்.., கில்லி..,சென்னை-28..,படத்தோட தாக்கம் படம் முழுவதும்..?சென்னை -28 மாதிரி ஒரு படம் பண்ணணும் அப்படிங்ற இயக்குனரின் கனவு சாத்தியப் பட்டிருக்கிறது..

படத்தின் முதல் பாதி சுப்ரமனியபுரமும்., இரண்டாம் பாதி மேற் சொன்ன திரைப் படங்களும்..

புதிய இசையமைப்பாளர்.. கடம் வித்வான் விக்கு வினாயகராம் அவர்களின் வாரிசாம்…வாழ்த்துக்கள்..தமிழ் திரையுலகத்திறக்கு ஒரு நல் வரவு…

………………….

எங்கே தடம் புரண்டார்..இயக்குனர்..திரைப் படத்தையும் ஆவணப் படத்தையும் பிரித்து போடும் அந்த மெல்லிய சிவப்புக் கோடு., ஆவணப் படம் பக்கமாக சாய்கிறது படம் முழுவதும்..

சேது பாலாவும்., சுப்ரமனியபுரம் சசியும் வெற்றி பெறுவது இங்கே தான்…

சுப்ரமனியபுரம் படத்தின் முடிவில் ஒரு/இரு மரணம் தேவைப்பட்டது.., கதைக்காக..ஆனா இதுல எதுக்கு..?.முதல் படத்துல நாயகன் இறந்து போறது 80-துகள்ல இருந்த ஒரு பழக்கம் .., இன்னுமா..?

ஒரு (சின்ன) மாற்றுக் கடைசி காட்சி.,

கடைசி காட்சில., மாலை போட்ட கதா நாயகனின் புகைப்படத்த்ற்க்கு பதிலா..,’’ எவ்ளோ நேரன்டி’’ அப்படிங்கற கதாநாயகனையும்” தோ வந்துட்டேங்க “ அப்படின்னு வெளியே வர்ற அந்த மற்றொறு தமிழ் கதாநாயகி(புள்ளதாய்ச்சி) இருந்திருந்தா இன்னும் நல்லா இருந்திருக்கும் இல்ல..?

…………..

காவடி சுமப்பது போல மனசு காதல சுமக்குதடா..? வாழ்க தமிழ்.., வாழ்க பாடலாசிரியர்..


இடைவேளை., கடைசி காட்சியில் அந்த நாய்..படத்தின் தொடக்கம்.,எல்லா நண்பர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தார்.., வழைப்பழ நகைச்சுவைக்கு இணையாக பரோட்டா நகைச்சுவை..சம்பத்(தமிழ் தவிர) வாழ்க இயக்குனர்..

ஒளிப்பதிவு..பி.சி.சீராம் தாக்கம் சரி.. அவரு பண்ணா நல்லா இருக்கிற சில காட்சிகள் நீங்க பண்ணா எரிச்சலா இருக்கு ..ஏன்னு யோசிங்க ஒளிப்பதிவாளரே அடுத்த படத்துலயாவது..

அன்றலர்ந்த பூவாய் கதாநாயகி
யதார்த்தமான கதாநாயகனும்.,திரைக்கதையும்
மண் மனம் வீசும் கிராமம்
அழுக்கே அழகான மனிதர்களும்

வாழ்த்துக்கள் இயக்குனருக்கு- இந்த புதிய
முயற்ச்சிக்கும்., படத்தின் தலைப்பிற்க்கும்


பார்த்ததில் பிடித்தது....