இரவு விட்டுச் சென்ற பகலுக்கும்
பகல் விட்டுச் சென்ற இரவுக்கும்-இடையில்
நடந்து முடிந்தது எனது Zurich பயணம்…
இளமை போல
காதல் போல
திருமணம் போல
காமம் போல
வாழும் வாழ்க்கை போல….
சற்றேறக்குரைய
இதற்க்கு இடைப்பட்ட தருணத்தில்
நிகழ்ந்து முடிந்திருக்கக் கூடும்….
நான் கவிதை எழுதுவதும்- அதை
நீங்கள் வாசித்து முடிப்பதும்…
இரவு விட்டுச் சென்ற பகலுக்கும்
பகல் விட்டுச் சென்ற இரவுக்கும் இடையே…..
Manusham
LX 146 Zurich - New Delhi
12-12-2009 AM ßà PM