Friday, December 11, 2009

காலம்.. கண்டங்கள் கடந்து, காலம் கடந்து…








இரவு விட்டுச் சென்ற பகலுக்கும்
பகல் விட்டுச் சென்ற இரவுக்கும்-இடையில்
நடந்து முடிந்தது எனது Zurich பயணம்…

இளமை போல
காதல் போல
திருமணம் போல
காமம் போல
வாழும் வாழ்க்கை போல….

சற்றேறக்குரைய

இதற்க்கு இடைப்பட்ட தருணத்தில்
நிகழ்ந்து முடிந்திருக்கக் கூடும்….

நான் கவிதை எழுதுவதும்- அதை
நீங்கள் வாசித்து முடிப்பதும்…

இரவு விட்டுச் சென்ற பகலுக்கும்
பகல் விட்டுச் சென்ற இரவுக்கும் இடையே…..


Manusham
LX 146 Zurich - New Delhi
12-12-2009 AM ßà PM

Tuesday, December 8, 2009

புது பொண்டாட்டிக்கு உடம்பு முடியாமல் போன ஒரு ஞாயிறு காலை…

துவரம் பருப்பையும் பயத்தம் பருப்பையும்
கலந்து ஒண்ணுக்கு ஒண்றை
தண்ணி ஊத்தி (தனியா) வேக வச்சி, சிலுக்க…

கடுகு உளுத்தம் பருப்பு வெடிக்க தாளிச்சி
சிட்டிகை மஞ்சள் பொடி தூவி
நெடுக்கால வெட்டின சின்ன வெங்காயத்தை கொட்டி வதக்கி…..

நாட்டு தக்காளி வெட்டி போட்டு
கத்தறிக்கா முறுங்கக்காய் வதக்கி
கறிவேப்பிலை (கொஞ்சம்) கிள்ளி போட்டு
தக்காளி மசிய…..

நாலு கொட்ட (புது)புளிய தண்ணில கரைச்சி
மசிச்ச பருப்ப வெங்காய தக்காளியோட கொட்டி..
புளி கரைசலை ஊத்தி...

ரெண்டு கொதி வந்து இறக்கி வச்சி
அதன் தலைல - நாலு கொத்த மல்லி தழைய போட்டு
இறக்கி எடுத்தா, இட்லி சாம்பார்…..

மணக்க… மணக்க…


எத்தனை முறை / விதமாய் முயன்றாலும்
கைக்கெட்டாமல் போனது
அம்மாவுக்கு உடம்பு முடியாமல் போன அன்று...

பள்ளி செல்லும் வழியில் - குளத்து
படித்துறை மேல்
அப்பாவுக்கு அருகில்....
காக்கி கால் சட்டையில் சப்பனமிட்டு உண்ட
மந்தார இலை - மனோன்மனி
அக்காக் கடை இட்லி சாம்பாரின் சுவையும் மணமும்…..

Saturday, June 6, 2009



A Thin Red Line...................




 

காதலுக்கும் காமத்திற்கும் இடையே ஆன
மெல்லிய சிவப்புக் கோடு
மின்னி மின்னி மறைகிறது.....(A Thin Red Line)
புது வாழ்க்கைத் துணையின்
ஒவ்வொரு தீண்டலிலும்.......

 

Thursday, May 21, 2009

அன்புத் தோழமைக்கு.....

எனது

வாழ்க்கைப் பாதையில் ஆறுதலாய்…
உச்சி வெயிலுக்கு நிழலாய்…
தவித்த வாய்க்கு தண்ணீராய்…
சாலை முக்கில் வழிகாட்டியாய்…
இலக்கு தெரியா நிமிடங்களில் - சுண்டு விரல் கதகதப்பாய்
இதோ எனது திருமணம்..

உனது உளம் கனிந்த வாழ்த்தை எதிர்பார்த்து நாங்களும் - உனக்கு
என் திருமண அழைப்பிதழும்…..

உமது குடும்பத்துடன் உன் நல்வரவை எதிர் நோக்கும் - உன் நண்பன்

வெங்கட்

Sunday, April 26, 2009

வெண்ணிலா கபடிக் குழு…



வெண்ணிலா கபடிக் குழு…


திருட்டு வட்டத் தகடு பார்த்து விமரிசனம் எழுதும் இந்த தலைநகரத்து தமிழனை என் தமிழ்த் தாயும், தமிழ் திரையுலகமும் மன்னிக்கட்டும்…

என்னை மன்னிப்பவர்களுக்காக மட்டும் இத்திரை விமரிசனம்
…………….

கதை என்ன..?

ஒரு சாதாரன கிராமத்து இளைஞனுடைய வாழ்க்கை.. ஒரு திருவிழாவில் அவன் சந்திக்கும் ஒரு அழகான யுவதியுடனான காதலும்..அவன் சார்ந்திருக்கும் வெண்ணிலா கபடிக்குழுவுமாக பயணிக்கிறது கதை..

விளையாட்டு படம் என்றவுடன்..லகான்.., கில்லி..,சென்னை-28..,படத்தோட தாக்கம் படம் முழுவதும்..?சென்னை -28 மாதிரி ஒரு படம் பண்ணணும் அப்படிங்ற இயக்குனரின் கனவு சாத்தியப் பட்டிருக்கிறது..

படத்தின் முதல் பாதி சுப்ரமனியபுரமும்., இரண்டாம் பாதி மேற் சொன்ன திரைப் படங்களும்..

புதிய இசையமைப்பாளர்.. கடம் வித்வான் விக்கு வினாயகராம் அவர்களின் வாரிசாம்…வாழ்த்துக்கள்..தமிழ் திரையுலகத்திறக்கு ஒரு நல் வரவு…

………………….

எங்கே தடம் புரண்டார்..இயக்குனர்..திரைப் படத்தையும் ஆவணப் படத்தையும் பிரித்து போடும் அந்த மெல்லிய சிவப்புக் கோடு., ஆவணப் படம் பக்கமாக சாய்கிறது படம் முழுவதும்..

சேது பாலாவும்., சுப்ரமனியபுரம் சசியும் வெற்றி பெறுவது இங்கே தான்…

சுப்ரமனியபுரம் படத்தின் முடிவில் ஒரு/இரு மரணம் தேவைப்பட்டது.., கதைக்காக..ஆனா இதுல எதுக்கு..?.முதல் படத்துல நாயகன் இறந்து போறது 80-துகள்ல இருந்த ஒரு பழக்கம் .., இன்னுமா..?

ஒரு (சின்ன) மாற்றுக் கடைசி காட்சி.,

கடைசி காட்சில., மாலை போட்ட கதா நாயகனின் புகைப்படத்த்ற்க்கு பதிலா..,’’ எவ்ளோ நேரன்டி’’ அப்படிங்கற கதாநாயகனையும்” தோ வந்துட்டேங்க “ அப்படின்னு வெளியே வர்ற அந்த மற்றொறு தமிழ் கதாநாயகி(புள்ளதாய்ச்சி) இருந்திருந்தா இன்னும் நல்லா இருந்திருக்கும் இல்ல..?

…………..

காவடி சுமப்பது போல மனசு காதல சுமக்குதடா..? வாழ்க தமிழ்.., வாழ்க பாடலாசிரியர்..


இடைவேளை., கடைசி காட்சியில் அந்த நாய்..படத்தின் தொடக்கம்.,எல்லா நண்பர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தார்.., வழைப்பழ நகைச்சுவைக்கு இணையாக பரோட்டா நகைச்சுவை..சம்பத்(தமிழ் தவிர) வாழ்க இயக்குனர்..

ஒளிப்பதிவு..பி.சி.சீராம் தாக்கம் சரி.. அவரு பண்ணா நல்லா இருக்கிற சில காட்சிகள் நீங்க பண்ணா எரிச்சலா இருக்கு ..ஏன்னு யோசிங்க ஒளிப்பதிவாளரே அடுத்த படத்துலயாவது..

அன்றலர்ந்த பூவாய் கதாநாயகி
யதார்த்தமான கதாநாயகனும்.,திரைக்கதையும்
மண் மனம் வீசும் கிராமம்
அழுக்கே அழகான மனிதர்களும்

வாழ்த்துக்கள் இயக்குனருக்கு- இந்த புதிய
முயற்ச்சிக்கும்., படத்தின் தலைப்பிற்க்கும்


Tuesday, March 31, 2009

......................?


என்ன எழுத..?
யாரைப் பற்றி எழுத..?

தலைப்பு என்ன- கைவசம்
கருவும் கிடையாது ........

வலி இல்லை- சிறிதே
சந்தோஷமும் இல்லை..

பிறப்பும் இல்லை- இக்கணம் வரை
மரணமும் இல்லை....

எழுத தூண்டுவது யார்……?
படைப்பளியா..?
வாசகனா..?

எதைப் பற்றி எழுத..?
காதலையா..?
பிரிவையா..?

வடிவம் என்ன..?- கதையா..?
கவிதையா..?

குறிலா…?
நெடிலா..?

பதிக்கப் போகிறேனா..?- சுக்குச் நூறாய்
கிழித்தெறியப் போகிறேனா..?

உந்தித் தள்ளுவது- அமானுஷ்யமா..?
வெற்றிடமா..?

வெள்ளை ஓவியமாய்...........
நிசப்தத்தின் இசையாய்...................

முழுமையாய் இக்கவிதை…
ஊருக்கு சொல்லாமல் _ என்றோ பூப்படைந்த
ஏழைப் பெண்ணாய்..

இதோ இக்கவிதை-மேற் சொன்ன வரிகளில்
எங்கோ ஒரு (வரிக்) கவிதை……….

தட்டுங்கள் ,கதவு திறக்கட்டும்
தேடுங்கள், கவிதை கிடைக்கட்டும்….....

Thursday, March 12, 2009

என் இனிய கவி தா யினிக்கு…...



உனக்கும் எனக்குமான உறவுமுறை என்ன..?
நாம் எங்கு சந்தித்துக்கொண்டோம்..?
எப்போது…?
யாரால்..?
நமக்கான புரிதல்கள் என்ன..?
நான் உன்னை பின்தொடர்ந்ததையும்
நீ என்னை பின்தொடர்ந்ததையும்
நாம் அறிந்திருந்தோமா..?

மேற்க்கூறிய மேற்கோள்களின் அத்தனை வினாக்களுக்கும்
விடையாய் அந்த ஒற்றைக் கேள்விக்குறி- பெறுமிதத்துடன்….

வாய் வழியே சொன்ன வாழ்த்துரையின்
முதுகில் மறையும்
இனம் தெரியா சோகமும்
“இனம்” தெரிந்த ஏமாற்றமும்….

…………………
………………….

எனது அடையாளங்கள் உனக்குள் விதைத்திருக்கலாம்
எனக்கான அடையாளங்களை…

என்னுள்ளான உண்ர்வுகளை _ நீயும் பிரதிபலித்திருக்கலாம்
உன் கவிதைகளால்…

ஆறுதலாய் சில அனுமானங்கள்_ என் விழிவழி(யும்)
கண்ணீரை கை துடைத்து….

…………………
………………….

நானாகிய நானும்
நீயாகிய நீயும்
நாமாகவே இருந்திருக்கிறோம்- இதுவரை
இருபுற அறிமுகமில்லாமல்….

…………………
………………….

உனது கவிதைகளுக்கு கருவாய் ஒரு அழகான ஆண் மகனும்….
எனது கவிதைகளுக்கு கருவாய் ஒரு அழகான பெண் மகளும்….
எப்போதும் காதலர்களய்…!

…………………
………………….

நீ என்னை நிரகரித்ததை
நான் நிராகரித்தவள் வழிக் கேட்டபோது
என்னை சுற்றி சிரித்துச் சென்றான்_ அந்த
உடை கிழிந்த விதிக் கோமாளி
ஏளனமாய் பரிகசித்துக்கொண்டே……

…………………
………………….

இல்லாமல் போகலாம் _ இனி
உனது
வலைப் பூவில் எனது கால் தடங்களும்…..
விருந்தினர் வருகை என்னிக்கையின்
சில கூட்டுப் புள்ளிகலும்…

…………………
………………….

அத்தனை ஆண்களின் (கண்ணீரில்லா) அழுகுரலாய்
இந்த வரிகள்….

Good Luck &
Best Wishes for your Marriage Life…

என்ன செய்ய_ ஆணாகிப் போண
நா(ன்)ங்கள் என்ன செய்ய..?


மனுஷம்
12th March 2009
9W0824 Jet Airways

Thursday, February 19, 2009

கழிவிரக்கம்...



உச்சி வெயிலில்

வேகமாய் ஓடிக்கொண்டிருந்த

கட்டை வண்டியின் பெருமிதத்தை- உடைத்தெறிந்துச் சென்றது

சற்றுமுன் கடந்து சென்ற

விமானத்தின் நிழல்....

வலதுபுறமாய்,சாலை விதிகளுக்கு கட்டுப்பட்டு....

மூச்சிறைத்து நின்றன கிழட்டு எருதுகள்

கழிவிரக்கத்துடன்......


Monday, January 19, 2009

2009 சென்னை புத்தக கண்காட்சி ஒரு பார்வை…கடைசி நாளில்…


மார்கழி மாதத்தில் சங்கீத சபாக்களும், சங்கீதம் பற்றிய அலசல்களும், கான்டீன் ஆலாபனைகளும், பட்டுப் புடவை விலை விசாரிப்புகளும் மட்டுமா என்ன..?

புத்தகக் கண்காட்சியும், நானும் போட்டியாய் இந்த வருடம் முதல்…

புத்தகக் கண்காட்சியில் பொறுக்கியவை (படித்தவை அல்ல.,படித்தது பிடித்தால் என்றேனும் எழுதுவேன்..)

1. சுந்தரராமசாமியின் சிறுகதைகள்- சுந்தர ராமசாமி
2. மிதமான காற்றும், இசைவான கடலலையும்- தமிழ்செல்வன்
3. ஊமைச்செந்நாய் - ஜெயமோகன்
4. 18-ம் நூற்றாண்டின் மழை- எஸ்.ராமகிருஷ்ணன்
5. கதைகள் திரைக் கதைகள்- பாலுமகேந்திரா
6. கடவுளுடன் பிரார்த்தித்தல் - மனுஷ்ய புத்திரன்
7. கடைசி டினோசார் - தேவதச்சன்
8. உண்மை கலந்த நாட்குறிப்புகள் - அ.முத்துலிங்கம்

இயக்கனர் ராம் அவர்களின் தரிசனம்…
எழுத்தாளர்….கவிஞர்…உயிர்மை.., மனுஷ்ய புத்ரன் அவர்களை சந்தித்த போது…எனது வேண்டுகோளாக, அவரிடம் கோரியது….

தமிழ் வலைப் பூக்களுக்காக ஒரு பகுதி அடுத்த புத்தகக் கண்காட்சியிலாவது ஒரு இடம்…திரு மனுஷ்யபுத்திரன் அவர்களும் இதையே வழி மொழிந்தார்…

அவர் தற்போது இம்முயற்சியில் ஈடுபட்டிருப்பதாகவும், சிறந்த 50 வலைப்பூக்களை தொகுத்துக் கொண்டிருப்பதாகவும், வெகு விரைவில் வெளியிடப் போவதாகவும் தெரிவித்தார்..

அன்பார்ந்த வலைப் பூ படைப்பாளிகளே, படிப்பாளிகளே…..தங்கள் மனம் கவர்ந்த தமிழ் வலைப் பூக்களை

uyirmmai@gmail.com
என்ற மின் அஞ்சலுக்கு பரிந்துரைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்…அந்த இராமனின் முயற்சிக்கு நமது மின்னஞ்சல்கள் எல்லாம்., கூழாங்கல்லாய்..,நாம் அனைவரின் அனிலாய்..,

எல்லாம் முடிந்து வெளி வந்தவுடன் கலை அரங்கில் 32 புத்தக வெளியீட்டு விழா…, முதுகு சொறிந்து கொண்டே……




புத்தக கண்காட்சி என்பது BAPASI என்ற கூட்டமைப்பின் முயற்ச்சியா..? அல்லது லேனா தமிழ்வானன் அவர்களின் குடும்ப சொத்தா..?

சட்டசபையில் முதலமைச்சர்களின் முகஸ்த்துதி முதல்( இந்நாள் & அந்நாள்), விஜய் தொலைக்காட்சியில் “ உங்களில் யார் அடுத்த பிரபுதேவா..?” தொகுப்பாளினி வரைக்கும்.., தமிழனின் தனி மனித வழிபாடு கை கொட்டிச் சிரிக்கிறது.

எப்போது அடிமைப்பட்டான் தமிழன், இந்த தனி மனித வழிபாட்டிற்க்கும் முகம் சுளிக்க வைக்கும் முகஸ்துதிக்கும்..?

ஆறுதலாய் சேரன்..தனக்கு 10வது படிக்கும் மகள் இருப்பதாய் தனது கதாநாயன் பிம்பம் பற்றி கவலைப் படாமல் ஒத்துக் கொண்டார் யதார்த்த நாயகன்…,

மனப்பாடக் கல்வியை விட, வாழ்க்கைக்கு உதவும் கல்வியை வாழ்க்கைக்கு உதவும் கல்வியயை புரிந்து படிப்பதை , தற்காலத்து எழுத்தாளர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

மசாலா சினிமாவை நக்கலடிப்பதற்க்கு முன் ஒவ்வொரு எழுத்தாளானும் சிந்திக்க வேண்டிய ஒன்று…

மேடையில் அக்பர் கவுஸ்.,ஸ்நேகா..,தமிழச்சி.., நமிதா.., வடிவேலு.., மட்டும்தான்
இல்லை…BAPASI/ மணிமேகலை பிரசுரம் கவனிக்கவும்…,

ஏமாற்றம்
மெல்ல தமிழினம் மெல்லச் சாகின்றதே ஒரு மூலையில்…அதைப் பற்றி ஒரு வரி…ஒரு கண்டனம்.., ஒரு கருப்புக் கொடி இல்லாதது…ஒரு வேளை பிரணப் முகர்ஜி இலங்கை செல்வதை எதிர் பார்க்கிறதோ BAPASI…..?

கண்ணீர் …ஒரு பின்னோக்குப் பார்வை…


உறக்கமில்லா இரவுகளில்
நீண்டநேரமாய் படித்தயற்ந்த கண்களின் (இருபுறமும்)
கொட்டாவியின் இறுதியில் வரும்
கண் “நீர்” துளிகளில் இருக்கிறது
உன் பிரிவும் துயரமும்

என்றோ கதறியழுத இரவுகளை நினைவுறுத்தி….
துயரத்தின் உருவக உவமையாய்…

சற்றுமுன் தன் கதகதப்பை இழந்திருந்த
உள்ளங்கை ஈரம்….

பார்த்ததில் பிடித்தது....