Wednesday, September 27, 2017

படபடப்பு....





ஆள்  அரவமில்லா - முட்டுச் சந்து சுவற்றில்
ஒவ்வொரு மானுடம் க(ந )டந்து போகும் தருணங்களில்
இடுப்பு முட்டும் சிறுநீரிடமிருந்தும்
வாய் நிறைந்த (புகையிலை) எச்சிலிடமிருந்தும்
ஒருவரை ஒருவர் காப்பாற்றிக்கொண்டிருந்தனர்
நேற்றும், இன்றும், நாளையும் - கடவுளாக


அல்லாஹ்வும்
விநாயகரும்
இயேசுவும்

எதோ ஒரு படபடப்புடன் ..

ஒரு புதிய மதமும், அதை அழகாக வரையும்
ஓவியனும் வரும் வரை ................................

பார்த்ததில் பிடித்தது....