அழுவதும் ., அஃறிணையாவதும்
எதிரில் இருப்பது மனிதனோ /மானிட்டரோ
அவனோ/அவளோ/அதுவோ அழுதால் -தான் அழுவதும்
அவன் சிரித்தால், தானும் சிரிப்பதும்
தன் முன்னே- அழுவதும், சிரிப்பதும்
அஃறிணையா , உயர்திணையா என்பதை மறந்து
வாழும் வாழ்க்கையே இந்த (சமூக) அஃறிணையை , உயர்திணையாக்குகிறது
அவன் / அவள் /அது அழும்போது - நீங்கள் அழாமலும்
அவன் சிரிக்கும்போது நீங்கள் சிரிக்காமலும் வாழும் தருணங்களை
என்னவென்று சொல்வது ..?
மனுஷம்
23 ஜூன் 2016