Friday, December 26, 2008

பிடுங்கி நட்ட சில நாட்களில், குளிரில்…..

புலம் பெயற்தலை எழுத நினைத்ததும்
நினைவுக்கு வருவது…

கண்ணீரும் கம்பலையுமாய்- புருஷன்
வீட்டுக்குச் சென்று-ஒன்பதாம் மாதம் சிரித்துக்கொண்டே
தாய் வீடு திரும்பிய பக்கத்து வீட்டு அக்கா…

பாலா படத்து இலங்கைத் தமிழ்- அகதிப்
பெண்ணொருத்தி…

வாரத்துக்கு விட்டு-முதற்
கன்றை வளர்த்தவனிடம் தாரை வார்த்து
சோகமாய் நிற்கும்
மாட்டுத் தொழுவத்து லச்சுமி…..

வாத்தியார் தோட்டத்தில் இருந்து- யாருக்கும்
தெரியாமல் பிடுங்கி நட்ட
பலாச் செடி….

இப்படி எத்தனையோ….


ஆனால்
தொழிலுக்காக சொந்த மண்ணை பிரிந்து
ஏதோ ஒரு ஊரில்/நாட்டில் வாழும் வாழ்க்கை கூட
புலம் பெயற்தலாய்- சில நாட்களுக்கு முன்புவரை
தெரியாமல் தான் போனது…..

………………………………………………..

சமையல் என்பது
சமையலறையில் செய்து
சாப்பாட்டு மேசையில் பரிமாறப் படவேண்டியது
சாப்பாட்டு மேசையில் செய்து
அங்கேயே பரிமாறப் படவேண்டியது அல்ல..
எத்தனை முறை கத்தி இருப்பேன்..?

இப்படி
வரண்டு போன ரொட்டித் துண்டு
பச்சைக் காய்கறி
நாற்றமடிக்கும் ஊறுகாய்
தூசு படிந்த பச்சை மிளகாய்
அழுக்கான பொடி உப்பு- இவை கலந்து
சாப்பாட்டு மேசையில் உணவருந்தும் போது-சில
நொடிகளில் எனை கடந்து போகிறது
என் கத்தல்களில் எதிரொலி
இத்தனை நாட்கள் கடந்து…..
இத்தனை தொலைவு கடந்து……


…………………………………………………...

எதற்க்காக இவ்வளவும்..?
பள்ளியில் சின்னவன்
போன வாரம் சமைந்த பெரியவள்
பொண்டாட்டி கையால சாப்ப(பா)டு…
தம்பி கூட சொத்து சண்டை
மளிகைக்கடை சம்பளம்
திருவண்ணமலை மச்சான் வாழ்க்கை கூட
நன்றாகத்தான் இருக்கிறது-என்னைவிட
ஒரு வயது சின்னவனாக இருந்த போதும்….

………………………………………………………

விசா, பாஸ்போர்ட்டு மட்டும் தான் இல்லை
மற்றபடி எனக்கென்னவோ- இது
மற்றுமொரு பாகிஸ்தானாகத்தான் தெரிகிறது
பச்சைக் கொடியும், இயந்திர துப்பக்கிகளும் இல்லாமல் - ஹிந்தி மட்டும்
வித விதமாய் எல்லா இடங்களிலும்….
.
வாழ்க தமிழ்ப் பெரி(யா)யோர்….

………………………………………………………..

குளியலறை மின்சார சுடுதண்ணீர் பாத்திரத்தின்
மின்சாரம் தாக்கி இறந்து போன
என் சடலத்திற்க்கு கேட்காது
பெற்றோரின் அழைப்புகளுக்கு மணியடித்து மணியடித்து
இறந்து போன - என்
அலைபேசியின் மௌனம்
மரண அஞ்சலி செலுத்தலாம் எப்போதும் சமையலறை
வந்து போகும் அந்த திருட்டு(கருப்பு) பூனை
நன்றிக் கடனாய்….
……………………………………………………………

நாட்டைப் பிரிந்து வருவோர் தான் அகதிகளா..?
மொழியைப் பிரிந்து வருவோரும் அகதிகள் தான்....?
தமிழ் அகதி முகாமுக்கு வழி தெரிந்தால் சொல்லுங்கள்

தமிழில்….

(சன் தொலைக்காட்சி முக்கியம்)
………………………….

சமஜ் நஹி
நீச்சே…
பீச்சே…
சீதா ஜாவோ..
…….
……..

தூசு படிந்து நானும், அழுக்காய் இந்த நாடும்
ஹிந்தி பேசிக் கொண்டே…

“தத்தி பயலுவ…
இந்த ஹிந்திகார பசங்களுக்கு புத்தியே இல்ல..”

இன்னும் சில மாதங்களில்
புதியதாய் புலம் பெயர்ந்த ஏதோ ஒரு தமிழனின்
புலம்பலுக்கு ஆளாக நேரிடும்
நான்…..

இப்படிக்கு

ஒரு தில்லி வாசி

Monday, December 22, 2008

Rab Ne Bana Di Jodi



அவ்வை ஷண்முகில ஆரம்பிச்சு, பார்த்தீபன் கணவுல பயணம் செய்து, kabhi alvida naa ல முடிஞ்ச ஹிந்தி படம்….

வழக்கம் போல ஷாருக்கான், வழக்கம் போல ஒரு புதிய நாயகி, வழக்கம் போல காஜோல், வழக்கம் போல ரெண்டு, மூணு பாட்டு கதா நாயகிகள்…

வழக்கம் போல யாஷ் சோப்ராவின் சென்டிமென்ட் காதல்…

படத்துல நாயகனாய் ஒளிப்பதிவாளர்…ரவி கே சந்திரன்…பிளாக்.,சாவரியா படத்துக்கு அப்புறமா ஒரு நல்ல ஒளிப்பதிவோட ஒரு படம்…கண் கொள்ளா காட்சிகளாய்…

ஒரு நல்ல பாட்டு படம் முழுவதும்…

ஷாருக்கான் பிடிக்கறவங்களுக்கு மட்டும்…

Monday, December 15, 2008

எழுத்தாளனாகிய நான்….


எப்போதும் யாரோ- உடைந்த
சிலேட்டில் கவிதை எழுதி
கண் முன் காட்டுவதைப் போல..


கை பிடித்து-கையில் பேனா பிடித்து
காதலியின் வாஞ்சையுடன்
குருவின் ஆசியுடன்
யாரோ எழுதிச் செல்வதைப் போல….

அழகான கருவை - எழுதி முடிக்குமுன்
இறந்து போன அற்ப ஆயுசு கவிஞனின்- ஆவி
என்னுள் புகுந்து எழுதுவதைப் போல- பயமாய்
ஆனால் கையெழுத்து தெளிவாய்………..

மொத்தத்தில் என்
எல்லா கவிதைகளையும் - நான் எழுதாமல்
யாருடையதாகவோ...
மாற்றான் மனைவியாய்…..
எப்போதும் அழகாய்
அடுத்த வீட்டு குழந்தையாய்
எட்டி நின்று பார்க்கத்தான் முடிகிறது….

இந்த கவிதையும் சேர்த்து….
ஆனாலும் எழுதிக் கொண்டிருக்கிறேன்
நிறுத்த முடியாமல் வசியத்திற்க்கு கட்டுப்பட்டது போல…..

Saturday, October 4, 2008

தி(ரு)ரி விளக்கு.............



மனம் நிறைய
ஆயிரமாயிரம் மின் மினிப் பூச்சிகள்
ஜன்னல் ஓரத்து இரயில் பயணத்தில்
இருள் கவியும் இது போன்ற மாலைப் பொழுதில்
தொலைவில் தெரியும் சில தி(ரு)ரி விளக்குகளை காணும் பொழுது….
........................><...................................

இருட்டு உலகத்தின்
அசைந்தாடும் பவுர்ணமியாய்- அந்த
ஒற்றை வாசல் வீட்டின் உள்ளே
ஒரு திரி விளக்கு……….

எவ்வளவு நாட்களாயிற்று…?
திரி விளக்கின் அருகாமை அனுபவித்து…
........................><...................................
காலம் காலமாய விளக்கெரிந்த
காளி கோயிலிலும் விளக்கில்லை
பாழாய் போன பல்பு ஒன்று
அநாதையாய் தொங்கிக் கொண்டிருந்தது
வயிறு வீங்கி…
சமீபத்தில் என் கிராமம் எனக்களித்த ஏமாற்றங்களில்
இதுவும் ஒன்று…
........................><...................................
செவ்வக தகரப் பெட்டியும்
பிரித்துப் போட்ட புதுத் துணியின் வாசமும்
திரி விளக்கின் அருகாமை கதகதப்பும்
மார்கழி மாத குளிருக்கு இதமாய் - மஞ்சள்
ஒளிப் பிரவாகமும்
பட்டணத்து ஏலக்காரனின் குரலை விட வசீகரமானவை…..
ஜில்லப்பா…
அப்பாவின் குரல் வரும் வரை- அநுபவிக்கும்
அந்த சுகமான ஏல அநுபவம்…. திருட்டுத் தனமாய்…
........................><...................................

மார்கழி குளிரின் முன் பனிக் காலத்தில்
ஏரி மதிலில்
பள்ளம் வெட்டி
ஈசல் தழையுடன்
அந்த திரி விளக்கை ஏந்தி செல்வதுதான்
எத்தனை சுகம்- திகிலோடு…
கொட்டப் போகும் ஈசல் பூச்சிகளை நினைத்து
பரிதாபத்துடன்,
மன சாட்சி உறுத்த…. உறுத்த…..
........................><...................................
ஈரச் சோளம் மணக்க …. மணக்க….
சாயங்காலம் சோளம் அரைத்த
கல் இயந்திரத்தின் அருகே
ஐந்தாம் வகுப்பு ஆங்கிலப் பாடம் படித்து
ஆயாவிற்க்கு கதை சொன்னதும்
இது போன்ற ஒரு திரி விளக்கின்
வெளிச்சத்தில் தான்…
........................><...................................
நான் கூட அறிமுகம் செய்வேன்
என் மகனுக்கு
ஒருநாளேயினும் மின்சாரம் அனைத்து
வீடு முழுவதும்
ஒரே ஒரு திரி விளக்கேற்றி
செயற்க்கையாய்….
........................><...................................
பாதுகாக்க வேண்டும்
பேரீச்சம் பழக்காரனை எதிர் பார்க்கும் ராந்தலையும்
மாட்டுத் தொழுவத்தில் செருகி வைத்திருக்கும்
திரி விளக்கையும்
அடுத்த சந்ததிக்கு…..

Wednesday, October 1, 2008

ராமன் தேடிய சீதை….

மழை நின்ற பின்பு தூறல் போல – உனை
மறந்த பின்பும் காதல்…

அலை கடந்த பின்பு ஈரம் போல – உனை
பிறிந்த பின்பும் காதல்

……………..

இந்த வரிகளையும், இசையையும் மட்டுமே நம்பி, உதவி இயக்குனரான நண்பனுடன் சண்டை போட்டு,(சின்னத் திரை தொடராம் இப்படம்) அவனுடனே சென்ற தமிழ் படம்….

நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு தெளிவான தமிழ்ப் படம். ஆரம்பம் முதல் முடிவு வரை அத்தனை தெளிவு, துணிச்சல்..வாழ்க இயக்குனர்…(1)

பல பெண்களில் தன் சீதையை தேடும் ஒரு கற்கால ராமனின் கதையும்.,தற்கால பெண்களின் எதிர் பார்ப்பும் தன் ராமன்களைப் பற்றி…இது தான் கதைக் களம்…

மூன்று கதாநாயகர்கள், ஐந்து கதாநாயகிகள்..இவர்களின் பாத்திரப் படைப்பு, அதர்க்கும் மேலாக இவர்களை கையாண்டிருக்கும் துணிச்சல், வாழ்க இயக்குனர்……(2)


தமிழ் மக்களுக்கு…. எப்படியாவது இப்படத்தை வெற்றி பெறச் செய்து, இது போன்ற திரைப் படங்கள் வளர்ந்து, ஒரு திரைப்படத்தில் ஒரு கதாநாயகன் என்ற ஏகாதிபத்திய உணர்வை தூக்கி எறிந்து, ஒவ்வொரு நடிகனின் முதலமைச்சர் கணவை உடைத் தெறிவோம்…..

திரைப் படத்தில் அழகான சிறுகதைகளாய் பசுபதியும், நிதின் சத்யாவும்….நடிகர் சேரனை விட இவர்கள் இருவரும் தொலை தூரத்தில் முந்தி ஓடிக்கொண்டு…. வாழ்க இயக்குனர்…(3)


நடிப்பும், பாவனைகளும் வராத போது இம்முறை கை கொடுத்திருக்கிறது சேரனுக்கு திக்கு வாய்..இன்னும் எத்தனை படத்தில் தான் முகத்தை மூடி அழுவது… வாழ்க இயக்குனர்…(4)


இது போன்ற படத்தை நடித்து, விளம்பரம் செய்து கொடுத்ததற்க்கும், நடிகையின்(நவ்யா நாயர்) கையால் பிரம்படி வாங்க தயாராக இருக்கும் ஒரே தமிழ் கதா நாயகன், தான் (ego) மறந்து. நடித்ததற்க்கும்- நன்றி இயக்குனர் சேரன் அவர்களுக்கு….

அசிங்கப் பட்டு, நிராகரிக்கப் பட்டு, அவமானப் பட்டு தியாகம் செய்யும் பாத்திரம் சேரனுக்கு இந்தப் படத்திலும்.. அளவெடுத்து தைச்ச சட்டை மாதிரி….பாந்தமாய் சேரன் கதாபாத்திரம்..

கதாநாயகியின் கனவு பாட்டுல வந்து , அவ நெருந்கி வரும் போது கருப்ப் கண்ணாடி போட்டு, விலகி போறது MGR, சிவாஜி காலத்து வழக்கம்..திரை அறங்கில் சத்தமிட்டது உங்கள் அலுவலகம் வரை கேட்டிருக்கும்னு நினைக்கிறேன்… வேண்டாம் ஐயா…

ஐந்து கதாநாயகிகளும் இயக்குநர் தங்களை தேர்வு செய்ததை நியாயப் படுத்தி இருக்கிறார்கள். வாழ்க இயக்குனர்…(5)


அழகான ஆறாவது கதாநாயகியாய் வித்யாசாகரின் இசை..

நாலஞ்சு அழுகை காட்சிகள் வந்தாலும் படத்தை சின்னத் திரை தொடரா பாக்கிற காலம் இது, இயக்குனர் அவர்களே.. கவனம்..

திருஷ்டி பொட்டாய் அந்த கடைசி காட்சி….விமலா ராமன் தன் விருப்பதை சேரனிடம் தெரிவிக்கும் இடம்….இன்னும் கொஞ்சம் நல்லா முயற்சி செய்யுங்க ….

இன்னும் கொஞ்சம் முயற்சி பண்ணா, அமீர், வெற்றிமாறன், வெங்கட்பிரபு பக்கத்துல ஒரு இடம் நிச்சயம்.. வாழ்க இயக்குனர்…(6)

ஒரு குடும்பத்தோட, எல்லோரும் பாக்க கூடிய ஒரு நல்ல பொழுது போக்குத் திரைப் படம்… வாழ்க இயக்குனர்…(7)

Tuesday, September 23, 2008

நேரலையில் ஒரு கைக்கிளைக் கடிதம்….. ---- பகுதி- III

கேட்க முடியா சில கேள்விகளும்
மன்டியிட்ட மன்னிப்பும்
வாசிக்க முடியா வாழ்த்துரையும்……………..



எப்படி இருக்கிறாய் தோழி…?
எங்கு இருக்கிறாய்..?
புகுந்த வீடு பழகிவிட்டதா…?
புதுக் கணவன் தோழனாக மாறிவிட்டானா…?
சுற்றமும் நட்பும் பழகிப் போனதா..?
சமையலறை பிடிபட்டதா….?
புதுக் கணவனுக்கு முதல் முறை என்ன சமைத்தாய் …?
காதல் கணவனின் பரிசு கிடைத்தா…?
எப்படி சென்றாய்.. விமானத்திலா/தொடர் வண்டியிலா…?
தேன் நிலவிற்க்கு வடக்கா/ தெற்கா….?

எப்படி பதிலலிக்கப்போகிறாய் என் அன்புத் தோழி- இந்த
எல்லா கேள்விகளுக்கும்..?

……………………..<>……………………….

மன்னிப்பாயா தோழி..?
இந்த கேவலமான தோழனை- வழக்கம் போல

நான் என்ன செய்ய..?- ஆணாகிப் போன
நான் என்ன செய்ய..?

வக்கிரங்களும்
பொறாமையும்
ஏமாற்றமும்
விரக்த்தியும்
மதுவும்
பேரிழப்பும் - உச்சம் தொட்டு
இந்த கருப்பு பேனாவின் வழியே
வெளியேறித்தான் போகிறது
சிறிது சிறிதாய்- என்
ஆளுமைக்கு கட்டுப் பட்டு, க(விதை)களாய்…..
மன்னித்துவிடு- என் கவிதைகளுக்காய்
என்னை….

……………………..<>……………………….

நன்றாய் சாப்பிடு
வேளைக்கு உறங்கு
ஊர் சுற்றிப் பார்- கணவனுடன்
கை கோர்த்து, வழி நெடுகிலும்

என்னை எங்காவது பார்க்க நேர்ந்தால் பேசாமல் போ…


சந்தோசக் கடலில் மூழ்கி முத்தெடு- கணவன் என்னும்
பிராண வாயு பெட்டகத்தை முதுகிலும்
அவன் வாரிசை உன் வயிற்றிலும் சுமந்து…

உனக்காக மலர்ந்திருக்கலாம்- அந்த புதிய உலகத்தில்
பல அழகான (வாசம் மிகுந்த) பூக்களும்
சில நல்ல இதயங்களும்- உனக்கு பிடித்த
ஒரு நல்ல வாழ்க்கையும்
அதிகாலை சூரிய உதயம் போல- பிரகாசமாய்
ஒளிப் பிரவாகமாய்……….

வாழ்க பல்லாண்டு
பல கோடி நூராயிரம்
என் அன்னையின் அருளால்…

வாழ்க என் தோழி நலமாய்- வளமாய்
என்றென்றும்


மனம் குளிர வாழ்த்தும்

தொலைதூரத்து வழிப்போக்கன்

---------------------சுபம்------------------------------------------

Friday, September 5, 2008

நேரலையில் ஒரு கைக்கிளைக் கடிதம்….. ---- பகுதி- II

ஒரு கன்னிப் பையனின் சாபம்- ஒரு சாந்தி முகூர்த்த இரவுக்கு….




என் அடையாளங்கள் தொலைந்து போன ஓர் இரவு….

இத்தனை பேரிரைச்சலும்
குட்டி பிள்ளையாரும்
ஈ மொய்க்கும் இனிப்புகளும்
மீதமிருக்கும் இந்த படையல் பழங்கலும்

உடைந்து போன பிள்ளையார் குடையும்
மூலையில் காய்ந்து போன வாழையிலையும்
தன்னந்தனியாய் நானும்…

........................><..................................


என்ன செய்துகொண்டிருப்பாய் இப்போது..?
நிச்சயதார்த்த புடவை சரசரக்க..
கற்றை கண்ணாடி வளையள்கள் சலசலக்க..
குங்கும சிவப்பாய் வெட்கத்துடன்
நடந்து கொண்டிருக்கலாம்………(வலுக்கட்டாயமாய்)

ஆர்வத்துடன் பட்டு வேட்டியில் அவன் அங்கு
யாருமில்லா தனியறையில்
மூன்றாவது குப்பி மதுவுடன் நான் இங்கு

வீடு முழுவதும் வட்ட தகடுகளுடன்
நான் களைத்து போய்
தண்ணி கொடுக்க கூட ஆளில்லாத அறையில்….

........................><..................................

யார் அவன்..?
உன் மீதும்
உன் உடல் மீதும் என்ன உரிமை அவனுக்கு..?

பாழாய் போன தாலி
பழகிப் போன கல்யாணம்
இதுதான் அந்த அவனின் அடையாளமா…?

........................><..................................

என்ன செய்யப் போகிறாய் நாளை காலை..?
அழிந்து போன குங்குமத்துடன்
கசங்கிப் போன பட்டுப் புடவையுடன்
உடைந்து போன வளையுடன்

அப்படியே சென்று உன் பெற்றோரிடம் கூறு
நேற்று நடந்த சங்கமத்தில்- இறந்து போனவை
என்றோ காதலித்த இரண்டு இதயங்கள் என்று……
........................><..................................


புரியாத புதிராய் நீ…
அன்றும், இன்றும்- என்றென்றும்
இப்போதாவது கூறிச் செல்…

உன் வாழ்க்கை எனும் நாடகத்தில்
நான் யாரென்றும்- நான் ஏற்று நடித்த
பாத்திரம் எதுவென்றும்…?

........................><..................................

இனி நாம்
உனக்கும் எனக்குமான உறவு முறைதான் என்ன..?
விபத்தாய் நாம் சந்திக்க நேர்ந்தால்
நமக்கான ஒரு தெளிவிற்க்கு….

புனர்ச்சி பெருக்கில் தத்தளித்து கிடக்கும் உனது
ஏதேனும் ஒரு உறங்காத இரவுகளில் யோசித்து சொல்
உனது கனவனுக்கு தெரிந்தோ/ தெரியாமலோ…
........................><..................................

இனி நீ….

எதிர் கொள்ளும் இரவுகளில்
என் முகமூடி அணிந்து உன் மீது படரப்போகும்
அவனான உன் கணவனுக்கு
நல்ல துணைவியாகவும்

தங்கள் கடமையைய் இனிதே செய்து முடித்த உன் பெற்றோருக்கு
நல்ல மகளாகவும்
வாழப் பழகிக் கொள்…

........................><..................................

இனி நான்

கை பிடித்து நடந்த காதலி
கரைந்து போனதாய் ஞாபகம்
கண்ணெதிரே…

காட்டற்று வெள்ளமாய் வாழ்க்கை
காலடியில் வெகு வேகமாய் சரிந்து கொண்டிருக்கும் மணலாய்
கரைந்து கொண்டிருக்கிறது தன்னம்பிக்கை….

தலை மூழ்கி
உடல் நனைந்து
சுழி சூழ்ந்து
அலையால் அலைக்கழிக்கப் பட்டு- கரை சேர்ந்த போதும்
கேட்டுக் கொன்டிருக்கிறது

கடைசியாய் நீ அழுத சத்தம்
காதருகே……….

Tuesday, August 19, 2008

சத்யம் சொல்லும் சத்யங்கள்...


சத்யம் IPS

சில பல நாட்களுக்கு முன் ஒருநாள்….

நடிகர் விஷாலும், இயக்குனர் ராஜசேகரும் சத்யம் படத்தை பற்றிய விவாதத்தில்…..

ரா: சட்டமும், சாமியும் ஒன்னு
இந்த இரண்டு மட்டும் தான் தண்டனை கொடுக்கும் அதிகாரம் உண்டு இதுதான் இந்த படத்தோட ஒரு வரி கதை

ரா: இந்த படத்துல நீங்க ஒரு காவல் அதிகாரியா நடிக்கறிங்க …

வி: சரி,சரி கதையய் சொல்லுங்க முதல்ல..

ரா: ஒரு முதலமைச்சருக்கு உடம்பு சரியில்லாம மருத்துவமனைல சேர்க்கப் படராரு சார்.அவரு கூடிய விரைவில் இறந்து விடுவார்ன்ர நம்பிக்கைல அவருக்கு அடுத்த நாலு மந்திரிகலும் அந்த பதவிக்கு போட்டி போடராங்க .அதுல ஒரு மந்திரி மத்த மூணு அமைச்சர்களையும் கொலை பண்ண மும்பையில் இருந்து ஒரு வாடகை கொலையாளியய் அமர்த்தி கொலை பண்ண திட்டம் தீட்டராரு.

திட்டப் படி உணவு அமைச்சர் நடு தெருவில் தனது சிற்றுந்தில் வைத்து கொல்லப் படராரு….

துடிப்பான காவல் அதிகாரியான உங்க கிட்ட அரசாங்கம் இந்த வழக்கை விசாரிக்க உங்களை நியமிக்க, நீங்களும் கொலையாளியய் தேட ஆரம்பிக்கறிங்க

வி: கதை ரொம்ப நல்லா இருக்கே, மேல சொல்லுங்க…

ரா: சுகாதார அமைச்சர் ஒரு கோவில் திருவிழாவில் கலந்து கொள்ளும் போது பின் மண்டைல துப்பாக்கி குண்டு தாக்கி இறந்து போறாங்க..
உங்க பாதுக்காப்புல இருக்கும் போதே…

இந்த செய்தி கேட்டு மிகவும் சந்தோஷமடையும் நிதி அமைச்சர் தனது வாடகை கொலையாளியய் கூப்பிட்டு பாராட்டும் போதுதான் தெரியுது இதெல்லாம் அவன் செய்யலைன்னு…..

அப்ப இந்த கொலைகளை செய்த கொலையாளி யாரு…அவனோட அடுத்த இலக்கு யார்..?

மீதமிருக்கற இரண்டு அமைச்சர்களும் ஒருத்தரை ஒருவர் சந்தேகிக்க, சாவு பயம் இரண்டு பேர்கிட்டேயும்…

இதற்க்கு இடையில் வேட்டையாடு விளையாடு பாணியில் நீங்க கொலையாளியய் நெருங்க…. நெருங்க….

அவனது மூன்றாவது இலக்கு வனத்துறை அமைச்சர் எனத் தெரிந்து அவரை காப்பாற்ற முடியாமல் கொலையாளி மூன்றாவது கொலையை செய்த பின் அவனை துரத்தி பிடிக்கறீங்க ….

அப்ப தான் தெரியுது , நீங்க யார பாத்து இந்த காவல் துறைக்கு வந்திங்களோ அந்த காவல்துறை கண்கானிப்பாளர் தான் அந்த கொலையாளின்னு….

சட்டமும், சாமியும் ஒன்னு,இந்த இரண்டு மட்டும் தான் தண்டனை கொடுக்கும் அதிகாரம் உண்டு அப்படின்னு சொல்லிக்கொடுத்ததே அவர் தான்….

அப்படி சொன்ன அதிகாரியே இப்போ “சட்டமும் செத்து போச்சி சாமியும் செத்து போச்சி அதனால தான் நானே சட்டமாகவும் , சாமியாகவும் மாறி தண்டனை கொடுத்தேன்னு சொல்றாரு….

இல்ல சட்டமும், சாமியும் ஒன்னு,இந்த இரண்டு மட்டும் தான் தண்டனை கொடுக்கும் அதிகாரம் உண்டு அப்படின்னு நிருபிச்சு உங்களுக்கும் அதே சட்டத்தால தண்டனை வாங்கித்தற்றேன்னு நீங்க…

அதுக்கு முன் அந்த நாலாவது அமைச்சரோட தப்பை எல்லாம் வெளி உலகத்துக்கு சொல்லி அவரை கைது பண்ண முடியுமான்னு சவால் விடரராறு அவரு….

இந்த சாவால்ல நீங்க வெற்றி பெற்றீர்களா இல்லையா என்பது தான் முடிவு…

வி: அருமையா இருக்கு, ஆமா…,படத்துக்கு நயன்தாரா 30 நாட்கள் கொடுத்து இருக்காங்க, யுவன் வேற அழகா ஐந்து பாட்டு போட்டு இருக்கார் அத என்ன பன்றது..?

ரா:உங்களுக்கு கை கால் விளங்காத அம்மா…உங்க அடுக்கு மாடி குடி இருப்பில கதாநாயகி நயன் தாரா…உங்க அம்மாக்கு நீங்க உதவும் போதும், நயன்தாரா உதவும் போதும் ஐந்து பாட்டு வைச்சிக்கலாம் …

வி:சரி அடித்தட்டு மக்களுக்காக படத்துல சண்ட..?

ரா:வைச்சிருக்கேன் ..ஐந்து சண்டை…நீங்க முப்பது பேரை அடிக்கரீங்க..வெத்து உடம்போட…

ஒரு காட்சில நீங்க ஒரு பந்த எட்டி உதைக்க அது ஐந்து பேர அடிச்சு வீழ்த்திட்டு அப்படியே உங்க திரும்பி வந்து உங்க உள்ளங்கையில சுத்தோசுத்துன்னு சுத்துது..தலை கீழா..புவியீர்ப்பு விசைக்கு கட்டுப்படாம…

வி: பலே…தெலுங்குல 100 நாள் நிச்சயம்…தமிழ்ல படம் காக்க காக்க மாதிரி இருக்கனும் ..

ரா: கண்டிப்பா..ஆண்டனி, ஹாரிஸ் ஜெயராஜ் அப்புறமா ஆர்.டி.ராஜசேகர் எல்லோரும் இருக்காங்க …

வி: இருக்கட்டும், இருக்கட்டும் அவருதான் இந்த படத்தை இயக்கி இருக்காருன்னு படத்தோட விளம்பரத்தில போட வசதியா இருக்கும்…

மற்றவை வெள்ளைத்திரையில்................

--------------------X-----------------------

பாராட்டுகள்

வசனகர்த்தாவின் அனல் பறக்கும் வசனத்திற்க்கு..

சட்டமும், சாமியும் ஒன்னு, இந்த இரண்டு மட்டும் தான் தண்டனை கொடுக்கும் அதிகாரம் உண்டு

Encounter என்பது காவல் துறையின் கையாலாகத்தனம்

ஒரு அரசியல் வாதிக்கு கத்தி தியாகு,மீசை கோபி, ஒயின்ஸ் முருகன், கத்தி குமார் போலத் தான் காவல் துறையும், காசு கொடுத்து கொல பண்றதுல....

உபேந்திரா, தமிழுக்கு கிடைத்த ஒரு நல்ல வில்லன்…….

யுவனுக்கு ,,,

6 பேக் விஷாலுக்கும், நயன் தாராவுக்கும்

கடைசியாக

ஒரு அழகான கதை, வணிக திரைப்படம் என்ற காரணத்தால் அலங்கோலமாக கற்பழிக்கப்பட்டு , பரிதாபமாய்…

தமிழ் திரையுலகத்தை யாராவது காப்பாற்ற வருவார்கள் என்ற நம்பிக்கையில் …….

தமிழன்

Sunday, August 10, 2008

குசேலனும், ரஜினி என்ற ஒரு சமூக குறியீடும்….


பிரும்மாண்டம் என்ற பெயரில் ஒரு அரை வேக்காட்டுத்தனம்.......


எல்லா பத்திரிக்கைகலும், ஊடகங்கலும் ஏகத்துக்கு திட்டி தீர்த்து விட்ட நிலையில், குசேலன் தரும் பாடங்கள் எனது பார்வையில்….

நட்பை அடி நாதமாக கொண்ட ஒரு திரைக்கதையில் , நட்பையும், அதன் ஆழங்களையும் திரைக்கதையில் சொல்ல முடியாமல் போனதே படத்தின் மிகப் பெரிய பலவீனம்…..

ரஜினி என்ற ஒரு சமூக குறியீட்டை கடவுளாக, அடுத்த தலைமுறை அரசியல் தலைவராக, தமிழ் நாட்டின் குல தெய்வமாக காட்டும் முயற்ச்சியில் பி.வாசு எவ்வளவு வெற்றி பெற்றார் என்பது, ரோபோ விற்க்கு பிறகு ரஜினியின் அடுத்த படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைக்குமா? இல்லையா என்பதை பொறுத்தது…

சந்திரமுகியின் தாக்கம் படம் முழுவதும், அதை நியாப்படுத்த அண்ணமலை பகுதி -11 வேறு…

பாவம் பசுபதி.. மலையால சீரினிவாசனை அப்படியே காப்பி அடித்துக் கொண்டே…நீங்களுமா பசுபதி..?

ஆறுதலாய், இசை. நன்றி ஜி.வி.பிரகாஷ்….வாழ்க உமது இசைப் பயணம்…


ஒளிப்பதிவு- அரவிந் கிருஷ்ணா..- எனது மதிப்பிற்க்குறிய ஒளிப்பதிவளர்களில் ஒருவர். இந்த கதைக்கு இப்படி ஒரு ஒளிப்பதிவு தேவையா..?கேமிரா கோணம், வண்ணம், அகேலா… ஜிம்மி ஜிப்.....



பி சி சிரிராம் அவர்களே தேவர் மகன் இப்படி பண்ணவில்லையே..?



ரவி .கே.சந்திரன் சொல்வது போல ஒளிப்பதிவு என்பது தனித்து தெரியக் கூடாது….அது சரி. ரஜினியும், பி.வாசுவும் செய்யும் போது , நீங்கள் மட்டும் செய்யக்கூடாதா என்ன?


ரஜினி படத்தில் வடிவேலுவா..? இல்லை வடிவேலு படத்தில் ரஜினியா..?
கேவலமான நகைச்சுவை மற்றும் காட்டுக்கத்தல் இலவசமாய்…

சென்னை புறநகரில், ஏதோ ஒரு திரை அறங்கில் நாலே நாட்களில் குசேலன் எடுத்து விட்டு “வன லோகத்தில் சொப்ன சுந்தரி” போட்டதாக நண்பர் ஒருவர் சொன்னார்…நம்ம நயன்தாரா ஒரு பாட்டு முழுவதும் நனைந்து நடிக்காததை, வடிவேலு மனைவி உடற் பயிற்ச்சி செய்து நடிக்காததை , அப்படி என்ன வ.லோ.சொ. சுந்தரி (நடிச்சு) காட்டப் போறாளோ தெரியல…

வரட்டும் இது போன்று குசேலன்கலும், குருவிகலும், சுப்ரமணியபுரங்கலும்..அன்னப் பறவையாய் நாம் இருக்கும் வரை தமிழ் சினிமா வாழும், தமிழும் வாழும்…………

ரஜினி என்ற ஒரு சமூக குறியிட்ற்க்கு..(தமிழ் நாட்டின் தலையெழுத்து…)

நன்றி திரு ஆர். சுந்தர்ராஜன் அவர்களுக்கு- நியாமான கேள்விகளை கேட்டதற்க்கு, விட்டுப் போன சில கேள்விகள் இதோ…

1.கர்நாடகத்தில் குசேலன் திரையிடாமல் செய்ததற்க்கு கன்னடதில், தெலுங்கு தொலைக்காட்சியில் மன்னிப்பு கேட்ட நீங்கள் ,அன்று தமிழனும், தமிழ் திரைப்படங்கள் தாக்கப்பட்டபோது எங்கு சென்றீர்கள்..வழக்கம் போல இமய மலைக்கா..?

2.ஒகெனகல் கூட்டு குடி நீர் திட்டம் குறித்து தங்கள் கருத்து என்ன..?

திரு. விஜயகாந்த் போல கொடி காட்டி, கை அசைத்து, முதலமைச்சர் கனவு காண்பதற்க்கு முன், அவரைப் போல நிலையான, தெளிவான ஒரு நிலைப் பாட்டை எடுக்க முயலுங்கள்…
இல்லை எனில் ஒரு நடிகனாக மட்டுமே உங்கள் அடையாளங்களை பிரதிபலியுங்கள்…..தயைகூர்ந்து….

இப்படிக்கு
எழுபது ரூபாய் கொடுத்து உங்கள் படம் பார்த்த,

நுகர்வோராய் ஒரு தமிழன்











Saturday, August 2, 2008

நேரலையில் ஒரு கைக்கிளைக் கடிதம்…......பகுதி-I..........................…..(ஜுலை முதல் செப்டம்பர் வரை)




நீ……
என் இத்தனை வயது பாவங்களுக்கும் பரிசு
உன் காதலா….
உன் பிரிவா..?

…………..<>…………………

நான் பார்த்ததை
ரசித்ததை
படித்ததை
கேட்டதை
மொத்தத்தில் யாரிடமும் -என்னை
பகிர முடியாமல் தவிக்கிறேனே இன்று ..
உன்னை தவிர

இதற்க்கு பெயர்தான் காதலா..?

…………..<>…………………

என்ன செய்யப் போகிறேன் …
நீ இல்லாமல் இனி.....

வழக்கம் போல
உறக்கமில்லா நடுநிசிகளில்
அலைபேசியில்
ஏழு நாட்கள் சண்டைக்குப் பின் சமாதானமாய்…
நானும் உனக்கான இடத்தில்
உன் சக்களத்தியாய்
அழகாய் அந்த தனிமையும்…

…………..<>…………………

அந்த பொண்ணுக்கு இந்த மாப்பிளையா..?
உன் நிச்சயத்திற்க்கு சென்று வந்த
என் அப்பவித் தாயாரின் ஆதங்கம்..

எல்லாம் தெரிந்தா..?
எதுவும் தெரியாமலா..?
எதுவும் தெரியாமல் நான்…..

…………..<>…………………

பெண்ணடிமைத்தனம் என்றோ
ஆணாதிக்கம் என்றோ கூறிக்கொள்..
எனக்கான நீ
அவனருகில் – உன் திருமண நிச்சயத்தில்

காதலை விட பொறாமையே பெரிதாய்…
எனக்கான ஏதோ ஒன்றை
யாரோ தட்டிப் பறித்துச் சென்று
என் முகத்தருகே
பரிகாசம் செய்வதைப் போல….

…………..<>…………………

உன்னை தோழி என்றால் அது
தோழமைக்கு இழுக்கு
உன்னை காதலி என்றால் அது
காதலுக்கு இழுக்கு

என்ன சொல்ல…?

…………..<>…………………


தொக்கி நிற்கின்றன
நான் இப்பொழுது எழுதும் எல்லா கவிதைகளும்
முடிவில்லாமல்…….

வாழ்க்கையயைப் போல..
முடிவில்லா சுதந்திரத்தில் அனந்தமாய்
தத்தளித்துக் கொண்டே….

…………..<>…………………

நிச்சயம்
நிச்சயம் வரை இது போதும்..

இன்னும் ............. நாட்கள் – உன் திருமணத்திற்க்கு

வலிக்க
வலிக்க
நிறைய எழுதுவேன்- காத்திருங்கள் நீங்களும்

வலிக்க
வலிக்க…….

Saturday, July 12, 2008

உள் நாக்கு…..



எழுதிவிட வேண்டும்
இந்த காய்ச்சலோடு….
சூட்டோடு சூடாய்……

>----------<

அனுசு அக்கா கடைக்கு எதிர் வீடுதான்
ஈயடிச்சாமூட்டு கிழவி வீடு
கூன் விழுந்த முதுகும்
நல்ல பாம்பு தோலைப் போல - சுருங்கிய தோலும்
தொங்கட்டான் காதும்
வட்டப் பொட்டும்
புகையிலைக் கறை படிந்து தேய்ந்து போன பற்களும்
கவர்மென்ட்டு புடவையும்
தெய்வீக சிரிப்புமாய்……


இது போன்ற காய்ச்சல் வேளையில்
என்னை கிழக்கு நோக்கி அமர வைத்து
சிறிதே செந்தூரம் எடுத்து
உச்சந்தலை நடு முடி தேடி
நாற் புறமும் நன்றாக சுழற்றி
“படக்” சத்தம் வரும் வர இழுத்துப் போவாள்..

என் அம்மா தரும் வெத்திலை பாக்கு காசை மறுத்து…
அந்த காய்ச்சல் உள் நாக்கு எல்லாவற்றையும் தன்னுடன்………..

>----------<

இவ்வளவு வேதனையிலும்
ஆளில்லா அடுக்கு மாடிக் கட்டிடத்தில்
மொழி தெரியா உலகத்தில்…
காய்ச்சல் களைப்பில்
காலையில் கண்ணாடியில் தெரிந்த உள் நாக்கு வளர்ச்சிக்குப் பிறகு
தேடிக் கொண்டிருக்கிறேன்
இந்த மானுட வெளியில்...

உள் நாக்கு எடுத்துவிட
கிழக்கு நோக்கி அமர்ந்து
அந்த கிழவியையும் – அவள் கையில்
இராமர் சிவப்பாய் அந்த செந்தூரத்தையும்………….

ஓவியம்




அற்புதமாய் வரைந்திருந்தான்
அந்த ஓவியன்

எல்லோருக்கும் புரியும் படியாய்
தெள்ள தெளிவாய்
வண்ணக் கலவையாய்
கலை கோப்பாய் - சமவிகிதத்தில்
கசங்கிய கலை பெட்டகமாய்
கணக்கிலடங்கா உழைப்பை உள்ளடக்கி
படைத்தவனின் கற்பனை எல்லைகளை தாண்டி

ஓவியனின் ஓவியங்களுக்கு அருகில்
தரையில் சிந்திய வண்ணப் புள்ளிகளின் நடுவில்

அவன் கைத் துடைத்து
தூரிகை துடைத்து
வியர்வை துடைத்து போட்ட
அந்த வெள்ளைத் துண்டு

அற்புதமாய் வரைந்திருந்தான்
அந்த ஓவியன்- அவனுக்கே தெரியாமல்

சலனம்...


அமைதியாய்…
அழகாய்…
ஆழமான குளம்

நிர்வாணமாய் அவள்
தன்னந்தனியாய்
குளத்தைப் போல, குளித்துக்கொண்டே

அலை அலையாய் அலையும் அலைகள்
சலனங்களின் மூலமாய்….
அந்த நிர்வாணம்

Sunday, June 15, 2008

தசாவதாரம்

தசாவதாரம்

மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய திரு கமல் ஹாசன் அவர்களுக்கு, ஒரு பட்டிக்க்காட்டன் எழுதும் கடிதம், உங்கள் தசா அவ தாரத்தை பற்றி ...


அழகான சிறு கதையாய் அந்த ஆரம்பம்..சைவ வைணவ சண்டை.. (ஹிந்து எதிர்ப்பு).அதை தொடர்ந்து வரும் காட்சிகள். அலை இல்லா கடலில் உங்களோடு இறந்து போகும் அரங்க நாதனின் சிரிப்பில் தான் எத்தனை இயல்பு….


எனக்கென்னவோ இதுதான் நீங்கள் தசாவதாரத்திற்கு செய்த கதையாகவும் எதோ சில பல காரணங்களுக்காக எடுக்க முடியாமல் போனதாகவும் தெரிகிறது ( சுந்தரி கண்ணால் ஒரு செய்தி...தளபதி பாடல் போன்று..)


முன்னந்தலைக்கும் முழம் காலுக்கும் முடிச்சி போட்ட மாதிரி அடுத்தடுத்த காட்சிகள் ....நேரு விளையாட்டு மைதானம்..முதல்வர், பிரதம மந்திரி..அறிவி ஜீவித்துவ உங்கள் பேச்சு , உயிர் அணு ஆராச்சி..புஷ் பில்லியன் டாலர் முதலீடு ..... விஞ்சானி வில்லன்...ஐய்யோ…..


உயிர் அணு விஞ்சானி(ஈ) , புஷ்(ஹாலிவுட்), சர்தார்ஜி(பஞ்சதந்திரம்),அக்ரகாரத்து பாட்டி(மிக்கேல் மதன காமராஜன்),ஜப்பானிய பைட்டர்(BABEL), அப்பாராவ்- RAW(இந்திரன் சந்திரன்),கதை நாயகன் (தசாவதாரம்),உயர்ந்த மனிதன் (மிக்கேல் மதன காமராஜன்),ஐயங்கார் பையன் (தசாவதாரம்),தலித் கிருத்துவர் பூவராகன் (சபாஷ் கமல் ..!) அமெரிக்க வில்லன் (Eliminator - 2) ..11 வேடம் தானே வருது.. 10 வேடம்னு சொன்னாங்க...?


கதைக்கு வருவோம் ...புராண படத்தை எடுக்க நினைத்து... BABEL பார்த்து, பாதிப்படைந்து அந்த வகையில் ஒரு படம் பண்ண நினைத்து, கே எஸ் ரவிக் குமாரை இயக்குனராக்கி பஞ்ச தந்திரம் வடிவில் , Eliminator -2, எல்லாம் சேர்ந்து ஒரு படம் ...


உங்கள் பாணியில் சொல்வதென்றால், Out of focus-ல் ஒரு koly wood படம்...கவன சிதறல்கள் பல ..கதையின் கரு, 11 வேடம், நகைச்சுவை சிதறல்கள்,நிறைய கதா பாத்திரங்கள், உங்களையும் சேர்த்து…..


கமல் ஹாசனான, கமலஹாசன் அவர்களே.. உங்கள் பெயர் மாற்றம் Numerology காரணமில்லை என்ற உங்கள் கூற்றை போல கிருத்துவத்தையும், இஸ்லாமையும் ஆதரிக்கும் காட்சிகள் படம் முழுவதும்..


இந்து துவத்தையும் , சைவத்தையும் இகழ்ந்து பேசும் உங்கள் பகுத்து அறிவு வாதத்திற்கு ஒரு சபாஷ் ... என்ன செய்வீர்கள் மஞ்சள் துண்டு பின்னல் செல்லும் அறிவாளி தொண்டன் தானே நீங்கள்...?


உங்களோடு இரட்டை வேடம், அசினோடு ஜோடியாக படம் முழுவதும் கட்டிப்பிடித்து நடித்து கொடுத்த விஷ்ணு பகவானுக்கு சம்பள பாக்கியாம் ... தயாரிப்பாளர் கிட்ட சொல்லி சீக்கிரம் கொடுங்க...


கேமரா... C G .. யை அழகாய் கையாண்ட ரவி வர்மனுக்கு ஒரு சபாஷ்..


முக அலங்காரம்-அவ்வை ஷண்முகி அளவுக்கு இது இல்லை .. எதோ 60 வயது பாட்டிக்கு 20 வயது பெண்ணாக்க மேக் அப் போட்டது மாதிரி... பூ வராகன் மற்றும் ஜப்பான் வீரன் தவிர்த்து...


கலை- சுனாமி மாதிரி மனதை கொள்ளை கொள்கிறது

தலைக்கெல்லாம் தலையான தலைக்கு ....இது ஒரு நல்ல முயற்சி ....உங்கள் தமிழன் உங்களிடம் எதிர்பார்ப்பது BABEL படத்தின் தழுவலை அல்ல..இன்னும் நிறைய...


எங்களுக்கு ஒரு ரஜினி ஒரு விஜய் , ஒரு அஜித் போதும் தல ...
இதற்க்கு காரணம் நீங்களே.. உங்கள் உழைப்பே… உங்கள் மீதான எதிர் பார்ப்புக்கு காரணம்... நீங்களே பன்னலன்ன வேற யாரு பண்ணுவா,,?



மர்மயோகியிலாவது எங்கள் கமலை (உடம்பிற்கும்/ புத்திக்கும் வயதாகா)எதிர் பார்க்கும்


உங்கள் மணல் தரை ரசிகன்


பட்டிக்காட்டான்


பின் குறிப்பு

1.சக எழுத்தாளர் திரு.சாரு நிவேதிதாவின் கருத்துகள் உங்கள் பார்வைக்காக

http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=43


2.BABEL என்னன்னு தெரியாதவங்கலுக்கு 2007 OSCAR வின் பண்ண ஒரு ஆங்கில படம்...அதன் படம் கீழே ..


Saturday, May 31, 2008

தாய்மை....




மகப்பேறு மருத்துவமனை
செவிலி இடுப்பில்
குழந்தையாய்...
அந்த தண்ணீர் குடம்….

சந்தோஷ சாமி….




அக்னி நட்சத்திரம் தொடங்கி விட்டது
அதிகாலை பூஜைக்கே
குளிர் சாதனப் பெட்டியில் மல்லிகைப் பூக்கள்..

நீ.......





நீ

இன்றும் கூட தள்ளித்தான் போகிறது..
என்றோ சம்பவித்திருக்க வேண்டிய
என் மரணம்……..

உன்னால்..

யார் நீ..?

காதலியா..?
கொலையாளியா..?

The Lives of Others- Germany



DAS LABEN DER ANDEREN

....................................................


ஒரு சராசரி ஜெர்மானிய படத்தை நினைவூட்டும் ஆரம்ப காட்சி.நாஜி ராணுவ வீரனைத் தொடர்ந்து செல்லும் கைதியும் ராணுவ வீரனின் பூட்ஸ் ஒலியும்….

அடுத்த காட்சியில், மனோதத்துவ/குற்றவியல் பிரிவு வகுப்பறையில் ஆசிரியரும் சில மாணவர்களும்…

இங்கே சிறை அதிகாரி (HGW XX/7)
குற்ற விசாரனை செய்ய, அங்கே அதே சிறை அதிகாரி ஆசிரியராய், தன் அனுபவங்களை பாடமாய் எடுத்துக்கொண்டு இருக்கிறார்….

ஒரு நல்ல திரைப்படத்திற்க்கு எடுத்துக்காட்டாய் வேறென்ன இருக்க முடியும் இதை விட….

………………….

கிழக்கு/மேற்கு என பிளவு பட்டு இருந்த ஜெர்மெனியை பின் புலமாக கொண்ட கதைக் களம்…

அந்த சமுதாயச் சூழலில் கதையின் நாயகனாய் ஒரு நாடக இயக்குனர், அவன் காதலியாய் அழகான நாடக நடிகை, அந்த நாடகத்தை காண வரும் ஒரு அரசியல் வாதியின் மோகம் அந்த (நிஜ) கதா நாயகியின் மீது..

இங்கே தொடங்குகிறது இந்த காதல் கதை….

ஒரு யாருமில்லா இரவில், நாயகனின் வீடு ராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்டு, வீடெங்கும் உளவுப் பொருட்கள் பதிக்கப் படுகின்றன, (20 நிமிடத்தில்) இரகசியமாய்…

இதை அறியா நாயகனின் நடவடிக்கைகள் பதிவாகின்றன… உளவு பார்க்கும் அதிகாரியாய் அந்த சிறை அதிகாரி(HGW XX/7)
மூலமாக, எதோ ஒரு அறையில் அவர்களின் சல்லாபங்கலும் சேர்த்து… அரசு ஆவணமாக…

நாடக இயக்குனரோ, தனது நண்பர்களுடன் சேர்ந்து, நாஜி அரசுக்கு எதிராக, அந்நாட்டில் நடக்கும் தற்கொலைகளைப் பற்றி ஒரு புத்தகம் எழுதும் பணியில், புதிய நாடகம் என்ற போர்வையில்….

தனது காதலி அரசியல்வாதியின் அரசியல் பலத்தால் கற்பழிக்கப்படுவதை தடுக்க முடியாத அந்த படைப்பாளியின் கழிவிறக்கம்…

இவை அனைத்தும் பதிவாகின்றன, சிறை அதிகாரி மூலமாக, தொலைவில் …
……………

ஒருநாள் மறைத்து, பதுக்கி சிவப்பு தட்டச்சு செய்யப்பட்ட அந்த புத்தகம், தடுப்பு சுவற்றிற்க்கு வெளியே பிரசுரமாகிறது..

வெகுந்து எழுந்த அரசு, நாயகனின் வீட்டை துடைத்து போட்டு, அந்த தட்டச்சு கிடைக்காமல் ஏமாந்து வெளியேறுகிறது…

விசாரனையின் பாகமாய் நாயகனின் காதலியய் சிறை எடுத்து, அடைத்து விசாரிக்கிறது…

இவை அனைத்தும் பதிவாகின்றன, சிறை அதிகாரி (HGW XX/7)
மூலமாக, தொலைவில் …

எத்தனையோ சோதனைக்குப் பிறகும் உண்மையை சொல்லத அவள், உன்னை மீண்டும் மேடையேற்றுகிறேன் என்ற ஒற்றை வார்த்தைக்கு மயங்கி (நடிகை….!) தட்டச்சு இருக்கும் இடத்தை சொல்லி விடுகிறாள்..

கண்ணிமைக்கும் நேரத்தில், சிறை அதிகாரி(HGW XX/7) தட்டச்சு எடுத்து மறைத்து வைக்கிறார், கதாநாயகனுக்கே தெரியாமல்..

உண்மை தெரிந்த மமதையில் ராணுவ அதிகாரி மீண்டும் நாயகனின் வீட்டை துடைத்து போட்டு தேட, அதிர்ச்சியில் நாயகன், நாயகியை நோக்க, தான் செய்த துரோகம் தன்னை உறுத்த, வேகமாய் வீட்டை விட்டு வெளியேறி, விரைந்து செல்லும் நான்கு சக்கர வாகனத்தால் பிணமாகிறாள், சற்று முன் காதலியாய் இருந்த அந்த நாயகி…


ராணுவமோ, நாயகனின் வீட்டை துடைத்து போட்டு, அந்த தட்டச்சு கிடைக்காமல் ஏமாந்து சிறை அதிகாரியை பதவி நீக்கம் செய்து இந்த வழக்கை முடிக்கிறது தடயமில்லா காரணத்தால்….

………………………..

சில வருடங்களுக்கு பிறகு…

ஜெர்மானிய தடுப்பு சுவர் இடிக்கப் பட்டு இரண்டும் ஒன்றாகின்றன…

பதவி நீக்கம் செய்யப்பட்ட சிறை அதிகாரி(HGW XX/7) வீடு வீடாக பத்திரிக்கை போடும் பணியில்…

ஒன்று பட்ட சுதந்திர ஜெர்மனியில், தனது வழக்குப் பதிவை நூலகத்தில் புரட்டிப் பார்க்கும் கதா நாயகனுக்கு அன்று அந்த சிறை அதிகாரி உதவியது தெரிய, தனது வாழ்க்கை வரலாற்று நூலை அவறுக்கே சமர்ப்பணம் செய்கிறான்….
…………………

எனக்கு பிடித்தவை

ஒளிப்பதிவும் அதன் கோணங்களும்
கடைசி காட்சி

சென்று வாருங்கள்

நாலு சண்டை
ஆறு பாட்டு
வடிவேலு
கவர்ச்சி நடனம் நாயகி
ஆயிரம் அடியாட்களை அடிக்கும் நாயகன்
படம் முடியும்போது வில்லனை கைது செய்யும் காவலர்கள்….
இப்படி எதுவும் இல்லாமல்

அழகாய்
அமைதியாய்
ஒரு திரைப்படம்..
சென்று வாருங்கள்

சத்யம் திரை வளாகம், Studio -5. இரவு 7:15 மணிக்கு..

Manusham
2:45 am. Trivandrum International Airport

Saturday, May 24, 2008

அரை ட்ரவுசர்..............

அரை ட்ரவுசர்
பையனைப் போலவே அரையுடயாய்..

பரிதாபமாய்…
நடுத்தர வர்க்கத்து அப்பாக்களும்
இழுத்து கிழித்து தைத்து கொடுத்த
புளிய மரத்தடி தையல்காரனும்
பதிலளிக்க முடியாமல் பல் இளித்துக் கொண்டு……..

பரிதாபமாய் இந்த மானுட வளர்ச்சி
பிதுங்கும் தொடைகளை காட்டிக்கொண்டு
எல்லா காலங்களிலும்…………..

தேடிக் கொண்டிருக்கிறேன்
முட்டிக்கு கீழே
தொடையயை மறைத்து
அரை ட்ரவுசர் அணிந்த யாரையாவது…

என்னையும் கடந்து
இன்னும் அரை ட்ரவுசர் அணிந்து…..

நீ…


எதிர் வரும்
எல்லா எதிர்பாலினத்திடமும்
எடை போட்டு பார்க்கிறேன் உன்னை…

முரன்...



ஒவ்வொரு (நல்ல) கவிதை எழுதி – முடித்தவுடன்
கடவுளாய் நான்…..

இதை எங்கோ, என்றோ
படித்ததுமாய் வாசகனாகவும் நான்….

கவிதைகள் என்று நான் (என்)
குழந்தைகளை குறிப்பிடவில்லை…

Hi.....Haikkoo

அளவுக்கு மிஞ்சினால்
அமிர்தமும் விஷம்…
செத்து மிதந்தன எரும்புகள்…
சு(ட்)டு ஆறிய பால் சொம்பில்…

அசைவு….

நகராதே….
என்ற என் வார்த்தைக்கு கட்டுப் பட்டு
அசையதிருந்த ரயிலை
நகராமல் நகர செய்தது….

குற்றவாளியாய்
குறு குறு பார்வையுடன்
என்னை கடந்து சென்ற ரயில்…

எதிர் வீட்டு ரெட்டை சடையயைப் போல…

Sunday, May 18, 2008

என் இனிய காதலியே..


காதல் குறித்த கவிதைகள் எல்லாம் சேகரிக்கிறேன்
தாடி கூட வைத்தாகி விட்டது
நேரத்திற்க்கு சாப்பிடுவதில்லை
உடல் மெலியத் தொடங்கிவிட்டது
கேட்பவர்களுக்கு சொல்லி மாளவில்லை _ உன்னை பற்றி

இன்னும் எத்தனை நாட்கள் மறைக்க முடியும்
மேற்ச் சொன்ன முக மூடிகளையும்…?


நீ தான் என் காதலி என்றும்...?

இந்த 34 வது பிறந்த நாளுக்குள்ளாவது சொல்லிவிடு…
என் இனிய காதலியே..

நீ யாரென்றும்
உன் முகவரி எதுவென்றும்…

நானும் என் எழுபது வயது பாட்டியும் ...


விவித பாரதி எங்கே எடுக்கும்..?
நாடகம் எங்கே கேக்கும்..?

மெட்ராஸ் என்ன நம்பர் ..?

-----------------------------------

எத்தனை தடவை சொல்லிக் கொடுத்தாலும்
என் எழுபது வயது பாட்டிக்கு மட்டும் புரிவதே இல்லை
வயதா, ஆணவமா..?
அவள் மரணத்திற்க்குப் பிறகும் எனக்கு தெரியல்லை…

பாட்டோ,செய்தியோ

அவளைப் பொருத்தவரை
எல்லாம் ஒரு கொடுப்பினை தான்..........

----------------------------------------

பள பள மூங்கில் வண்ண
வால்வு ரேடியோ பெட்டியின்
கர கர சத்தத்தையும் மீறி
இங்கும் அங்கும் நகரும் சிகப்பு முள்ளை நகர்த்தி

பாட்டோ
செய்தியோ
ஒலிச்சித்திரமோ
3 மணி நாடகமோ..
எப்போது, எங்கு, எது கிடைக்குதோ- அங்கே நிறுத்தி
அதை கேட்பது தான்
அவளின் ரேடியோ
பரிச்சயமும்
அனுபவமும்
அதிஷ்டமும்…

…………………

இன்று
நாள் முழுவதும் இனையத்தில்(Internet) வியாபாரம் செய்து
எல்லை இல்லா தொலை பேசியில்
அயல் கிரகம் பேசி…
சூரிய ஒளிக் காரில் பயணித்து
பசிக்கு மாத்திரை முழுங்கி
சிறிதே வண்ண சாராயம் குடித்து
குலாவி
வலது பக்க சுவராய் பதிந்திருந்த
தொலைக் காட்சி பெட்டியில் _ நானும் ரிமோட்டில்
CNN IBN
NDTV
BBC
SUN
SUN Music
M TV
V
Raj
……….
……….
--------------------------------------------------

காலங்களை கடந்து
மரபனுவில் மரபாய்
என்னுள்ளும்

பாட்டோ
செய்தியோ
திரைப் படமோ
நாடகமோ..
எப்போது, எங்கு, எது கிடைக்குதோ- அங்கே நிறுத்தி
அதை கேட்பது தான்
என் இன்றைய தொலைக்காட்சி
பரிச்சயமும்
அனுபவமும்
அதிஷ்டமும்…

என் வயது .........





திருவிழாவில் எதிர்படும்-என்

இளைத்துப்போன ஆசிரியரிடமும்......

கைக் குழைந்தையோடு வந்த ஏழாம் வகுப்பு நண்பனிடமும்...

கண்ணில் கரு வளையம் விழுந்த பக்கத்து வீட்டு காதலியிடமும்...


அப்பட்டமாய் தெரிகிறது


என் வயது

Saturday, May 10, 2008

அபர்ணா …….கோவிதாபம்-5



எத்தனை பேர் தொட்ட முலை
எத்தனை பேர் விட்ட துளை….

இப்படித்தான் தொடங்குகிறேன்- இந்த கோவிதாபத்தை
நாகரிகம் பற்றி கவலைப் படாமல்
அவசியம் கருதி
இந்த கவிதைக் கருவின் தாலி கட்டிய தந்தையாய் நீ…..

……………….

யார் நீ
கண்ணகியா..?
மாதவியா..?
சாவித்ரியா..?
சொர்ணமுகியா..? _ என் சகியா..?

நான் யாரென்று தெரியாததால் – நீ
யாரென்றும் தெரியவில்லை….

……………………

நீ..
நீ சார்ந்த எல்லாம்..
இந்த தினையில் எதை எழுதினாலும்
வினைத் தொகையாகவே முடிகிறது..
என்னை பொறுத்தவரை…

…………………….

உன்னை நான் எங்கே வைப்பேன்..?
உள்ளேயா..? வெளியேயா..?
மறைத்தா…? ஒளித்தா..?
உனக்கு தெரிந்தா..? தெரியமலா..?
பதிலை எதிர் பார்த்து _ உள்ளம்
நிறைய(யா) காதலுடன் நான்.

உன்னிடம் இருந்தும்- உன்
தாலி கட்டிய கணவனிடம் இருந்தும் _ நீ
காதலிக்கும் உன் காதலினடம் இருந்தும்………

……………………….

தினம் தினம் தலை மூழ்குகிறேன்..
எல்லா சோப்பும் தேய்த்தாகி விட்டது
இரண்டு வேலை குளிக்கிறேன்- சென்னையில்
இந்த கோடையிலும்

குளத்தில்
நதியில்
ஓடையில்
கடலில்_ எல்லா முயற்ச்சியும் பொய்த்துப் போனது
தினமும் குளித்தவுடன்
உடல் முழுவதும்
உடனடி அழுக்காய்
என் இரத்ததில் இருந்து _ என்
மரணம் வரை
வியர்வையாய்- நீயும் உன் நினைவுகளும்….

……………………….

கண்ணடி உருவமாய் நீ…
அழகாய்
தெள்ளத் தெளிவாய்
என்னுடன் வந்து _ நான்
பார்க்கும் போது உன்னைக் காட்டி
என்னுடன் நகர்ந்து மறையும்
(படம்) பிடிக்க முடியா மாயப் பிம்பமாய்….
ஐந்தாம் வகுப்பு அறிவியல் பாடம் சொல்வது போல…

……………………………

இருமனம் கொன்ட திருமண வாழ்வில்…………
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

கரையினில் ஆடும் நானலே நீ _ நதியிடம்
சொந்தம் தேடுகிறாய்…

நம்மைப் பொறுத்தவரை இதில்

நதி யார்..?
நானல் யார்..?
……………………
ஒரு உரையாடலின் போது
சாதாரணமாக, சதா ரணமாக தான் வந்து விழுந்தன
நீ தொழிற் பெண்ணன விதமும்
அதற்க்கு நீ கொடுத்த விலைகளும்

கிட்டிய பொருள் தரமென்றால்
கொடுத்த விலையும் தரமே..
ஏனெனில் பெண்ணே இது நீ வாங்கியது- பேரம் பேசி..

விலை பற்றி கூற நீ முன் வந்தாலும்- நீ
விலை போன விலை கேட்க நான் இல்லை.
புண் பட்ட எருதின் மேல் _ சதை
தின்னும் காக்கையல்ல நான்…

………………………………

முற்றுப் புள்ளி
இப்படித்தான் முடிக்க நினைக்கிறேன் இக்கவிதையைய்..
இங்கிருந்தே தொடர்கிறது _ இக்கவிதை
எப்போதும் போல….

…………………………………
ஐந்து வயது குழந்தையின் தாயாய் நீ
அழகான உன் காதல் கணவன்
சமீபத்தில் உன்னுடன் விடுமுறையயை கழித்த நம் நண்பன்
உன்னை பற்றிய கூற்றுக்கள்- அனைத்தும்
பொய்த்துப் போய்
(கெட்ட)கனவாகி
விழித்தெழும்
கோரிக்கையும் ஒன்றாகித்தான் போனது
இப்போதைய என் பிரார்த்தனைப் பட்டியலில்….

இடம் பெயராமை…..



நிலைய அறிவிப்பாளரின் அறிவிப்பின்
கடைசி வரை காத்திருந்து
பச்சைக் கொடிக்குத் தலையாட்டி
ஊரெங்கும் கேட்கும் அலரலோடு
தாளம் மாறாத ஜதியோடு
பூமி அதிர
நகரத் தொடங்கியது….

இந்த பக்கத்து மரங்களும்
அந்த பக்கத்து வீடுகளின் கூரைகளும்

அசையா ஜடமாய் நான்- சக ரயில் பிரயாணிகளோடு

எதிர் மாயத் தோற்றம் alais ALAISING

தீர்ந்து போக போகும் எல்லாமே

ரசிக்கும்படியாய்
சுவையாய்
அழகாய்
கம்பீரமாய்
வரும் வெறுமைக்கு முன் அறிவிப்பாய்
எதிர் மாய தோற்றமாய்….

………..><………………
அணையப் போகும் விளக்கு..
சாப்பிட்ட தட்டில் கடைசி பருக்கை...
மஞ்சள் நீராட்டிய ஆடு - கத்தியின் முன்..........
ரயில் சினேகிதியின் ஈரப் பார்வை _ யாரோ
ஒருவர் இரங்குமிடம் வருமுன்.........
இப்படி எத்தனையோ…
………<>……………………….

எழுதியது பிடிக்காமல்
தலைப்பு தெரியாமல்

சிறிய வயதில்
புகழானிக் கொம்பை அடைந்த
நண்பனின் அகால மரணத்திற்க்கு பின்
எழுத நினைத்த கவிதை- இந்த கவிதை
கிழித்து கசக்கி எறிவதற்க்கு முன் _ அழகாய்..

மரண இலக்கியமாய்
என்னை அறியாமல்- எதிர் மாயத் தோற்றமாய்…..

Thursday, May 8, 2008

எனது ஆசான் ...கவிப் பேரரசு வைரமுத்து.




கண் இமைக்கும் நேரத்தில் கடந்து போனவற்றில் -நாம் கவனிக்காமல் போனவை ஏராளம் ...

அப்படி ஒரு கவிதை உங்களுக்காக..

காதலை

பிரிவை

காமத்தை

விரகத்தை

ஏக்கத்தை

சங்கமத்தின் நிறைவை...

இன்னும் எத்தனையோ இக்கவிதையில் ....


யாருமில்லா இரவுகளில்

தனிமையான தருணங்களில் வாசித்துப் பாருங்கள் இக்கவிதையை.......
----------------------------------------------------------------------------

உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணித் துளியும்
மரண படுக்கையிலும் மறக்காது கண்மணியே


தொண்ணூறு நிமிடங்கள் தொட்டனைத்த காலம்
தொண்ணூறு ஆண்டுகளாய் இதயத்தை கலக்குதடி...


பார்வையிலே சில நிமிடம்..

பயத்தோடு சில நிமிடம்..

கட்டி அணைத்தபடி கண்ணீரில் சில நிமிடம்...

இலக்கணமே பாராமல்

எல்லா இடங்களிலும் முத்தங்கள் விதைத்த மோகத்தில் சில நிமிடம்....


உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணித் துளியும்
மரண படுக்கையிலும் மறக்காது கண்மணியே.....


எது நியாயம்...?எது பாவம் ..?

இருவருக்கும் தோன்றவில்லை..

அது இரவா..?அது பகலா..? அதை பற்றி அறியவில்லை..!


யார் தொடங்க ? யார் முடிக்க ?

ஒரு வழியும் தோன்றவில்லை - இருவருமே

தொடங்கிவிட்டோம் இது வரைக்கும் கேள்வி இல்லை


அச்சம் களைந்தேன் - ஆசையினை

நீ அனைத்தாய்


ஆடை களைந்தேன் - வெட்கத்தை

நீ அனைத்தாய்


கண்ட திருக்கோலம் கனவாக மறைந்தாலும்
கடைசியில் அழுத கண்ணீர் கையில் இன்னும் ஒட்டுதடி


உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணித் துளியும்
மரண படுக்கையிலும் மறக்காது கண்மணியே

Thursday, April 17, 2008

பொம்மரிலு என்ற சந்தோஷ் சுப்ரமணியம்....


தனிமை என்னை கூறு போடும் ஒரு சாராசரி இரவில், இத் தமிழ் புத்தாண்டு இரவயும் தனிமைக்கு காவு கொடுக்க மறுத்து சென்ற ஒரு தெலுங்கு தமிழ் படம்…

பொம்மரிலு என்ற சந்தோஷ் சுப்ரமணியம் ............

எதிர்பார்ப்பின்றி சினிமா செல்வோம் என்ற என் மானசீக குரு அமரர் திரு.ரங்கராஜன் என்ற சுஜாதாவின் கூற்றின் படி திறந்த மனதுடன் நான்…

ஒரு சாதாரண ஆரம்பம்.அசாதாரணமான காட்சி அமைப்புகள்.காதலனும் காதலியும் சந்திக்கும் முதல் காட்சியே இந்த படத்தின் அடிநாதமாக இருக்கும் இளமைத் துள்ளலுக்கு அடையாளம்…படம் முடியும் வரை சந்தோஷமாய்…

கதை: அந்தபுரத்து கூன்டுக் கிளியாய் அந்த ராஜாவின் மகனும், அவன் ஆசைகளும்………
பணக்கார பையன்.ஏழைப் பொண்ணு..இருவருக்கும் காதல்.. மகனின் சம்மதத்தை (எதற்க்கும் )கேட்காமல் நிச்சயம் செய்யும் அப்பா..இதற்க்கு பிறகு மகனுக்கு வரும் காதல், வேறொரு பெண்ணுடன்…

ஏழு நாட்கள் காதலியை காதலன் வீட்டில் இருக்க அப்பா சம்மதிக்க, அவளும் ஏழு நாட்கள் அவனது வீட்டில் தங்கியபோது தான் தெரிகிறது.அவனுக்கும் அவளுக்கும் ஏழாம் பொறுத்தம் என்று…

கதையிம் முதுகெலும்பாய் கதையின் நாயகி ஜெனிலியா டிசோசா.சுட்டித்தனமான முகம், குறு குறுப்பான கண்கள்..
குதித்தெழுந்தோடும் நடை,உடை,பாவனை..கதை முழுவதும் உன்னை சுற்றி உன்னை சுற்றி மட்டுமே…

ஆனால் கஜினியின் அசினும்,ச.சு ஜெனிலியாவும் ஏதோ ஒரு புள்ளியில் சங்கமித்துக்கொண்டே…

வழக்கமான பிரகாஷ் ராஜ், சூப்பர் செல்லம்..
வழக்கமான ஜெயம் ரவி..அரங்கில் ஒரே ஜொள்ளு மழை..

இசை.. வழக்கமான தேவி ஸ்ரி பிரசாத்..உனக்கும் எனக்கும் தாக்கம் ஆங்காங்கே….மாத்துங்க தல…போரடிக்குது…

அட சண்டையே இல்ல படத்துல..

அழகான சாரல் மழையாய் சந்தானம் மற்றும் பலர்..வடிவேலுக்கு ஒரு நல்ல போட்டி..
உஷார் கைப்புள்ள..எட்டி பாருங்க சிம்புத் தேவனும்
இதையே தான் சொல்றாரு…

இந்த கோடை விடுமுறைக்கு ஒரு நல்ல திரைப்படம், எல்லா வயதினருக்கும்..

இயக்குனர் பற்றி…கை எழுத்து நல்ல இருக்கு கார்பன் காப்பியாக இருந்தாலும்..
சுயமாக ஏதாவது முயற்சி பண்ணுங்க ராஜா சார்…

படம் முழுவதும் மயிலிறகால் மனம் வருடும் காட்சிகள் ஆங்காங்கே….
உணற்ச்சிப் பூக்களாய், அழகான புன்னகையாய், திரைப் படம் முடிந்து வரும் எல்லோர் முகத்தில் தெரிவது போல….

Tuesday, April 8, 2008

ஆசை..................



தொட்டு பார்க்கத் துடிக்கிறது
தார்ச் சாலையில்
உச்சி வெய்யிலில்
நடந்து செல்லும் யானையின் பாதத்தை
காதலுடன்…

மனுஷம்
12-02-02

சபதம்…

துறுதுறுக்கும் கண்கள்
இழுத்து தைத்தது போன்ற தோல்- தொட தூண்டும்
சிரிக்கும் போதும் மட்டுமல்ல
எப்போதும் ...............

அழகிய ஓசை பள்ளத்தாக்காய்
அந்த கன்னக்குழி
தாவத்துடிக்கும் மனதுடன் நீ…

ஒவ்வொரு தடவையும் தோற்றுத்தான் போகிறேன்
குழந்தையை தாங்கி நிற்கும் பெண்ணைத் தவிர்த்து
அந்த குழந்தையய் மட்டும் பார்க்க வேண்டும்
என்ற சபதத்தில் இருந்து……

காமம்..........


பிச்சைக்காரியின்
கை ஏந்தும் கைகளைத் தவிர
மற்றவை எல்லாம் தெளிவாய் தெரிகிறது - கவர்ச்சியாய்
மனிதம் மறைந்து நானும்…

மனுஷம்
30-03-02

NRI புள்ள…


வந்துட்டான்….
கொள்ளிபோட அமெரிக்காவில் இருந்து…
கடைசியாய் அப்பாவை பாக்க
பத்து நிமிடம் கழித்து வந்திருந்தால் கூட
பிணம் கிடைத்திருக்காது…

தாய்க்கு தல புள்ள- தகப்பனுக்கு
கடைசி புள்ள- அதுவும் ஒரே பிள்ளை….
வருவானா..? மாட்டானா…? துடித்து போனது இதயம்
பராவயில்லை..தனியாத்தான் வந்திருக்கான்…

ஈர ஆடை உடுத்தி
கண் கலங்கி
மண் கலயம் சுமந்து
தந்தையை சுற்றி வந்து - கடைசியாய்
மேற்கு நோக்கி நின்று
கலயம் உடைத்து
கொள்ளி வைத்து
முழுவதும் எரித்து
சிறிதே சிறிதாய் - மீதமிருந்த
எலும்புச் சாம்பல் பொருக்கி
கலசத்தில் இட்டு
வீடு திரும்பி
குளித்து, கால் கழுகி அமர்ந்தபோது தான்
சாந்தி அடைந்தது - ஆத்மா(கள்)
சுடுகாட்டுக்கு வந்த நாலு பேருக்கும்
சாவில் கலந்து கொண்ட அனைவருக்கும்…..

சற்று முன் சவமாய் - இப்போது
சாம்பலாய் அந்த அப்பா…

மனுஷம்
24-02-02

Sunday, April 6, 2008

குடுகுடுப்பைக்காரன் என்ற பிள்ளை பிடிப்பவன் ......................................கோ.. வி.. தா.. ப.. ம்……. பாகம் ---6


பிள்ளை பிடிப்பவன்.....

யாருக்கு தெரியும் - பிள்ளை
பிடிப்பவன் எப்படி இருப்பன் என்று..

சின்னஞ்சிறு வயதில்
எனக்கு ராச் சோறு ஊட்டியதில்
அந்த குடுகுடுப்பைக்காரணுக்கும்
பெரும் பங்கு உண்டு-பிள்ளை பிடிப்பவன் என்ற போர்வையில்
கருப்பு நிறத்தில் சிவப்பு கரையுடன்….
------<>-------
முறுக்கு மீசையும்
பிள்ளையார் தொப்பையும்
கிழட்டு மாடும்-அதன் மேல்
பழயதாய்
அழியாத மெருகுடன்
கண்ணாடி ஆடையுமாய்-செத்துப் போன
மாட்டின் தோலில் செய்த செருப்பும்
குடு குடு பை யுடன் - பெயற்க்காரணமாய்…
------<>-------
இராத்திரி வேளையில்…
அந்த வயதில்
அவன் வருகைச் சத்தம் கேட்கும் போது - என்னை
கடத்தி சென்று
இரண்டு கண்ணில் கரப்பு கட்டி- குருடனாக்கி
மூலதனமில்லா வியாபாரத்திற்க்கு
என்னை அழைத்து செல்வது போல……

இது தான் பிள்ளை பிடிப்பவன் என்ற
குடுகுடுப்பைக்காரன் பற்றி
என் மனதில் இன்றும்….
------<>-------
சிகப்பு தோலும்
வட்ட முகமும்
முத்து பல் வரிசையும்
மதிப்பு மிக்க ஆடைகலும்
நுனி நாக்கு ஆங்கிலமும்
ஐந்து இலக்க சம்பளமும்
நறுமண கவசமும் - அணிகலன்கலாய்……………
------<>-------

முற்போக்கு இலக்கியமும்
நவீன திரைப் படங்களும் – இதன்
தொழில் நுட்பங்களும்,
ஒளிப்பதிவும்
ஓவியமும்
பின் நவீனத்துவமும்
நாடக பரிச்சயமும்
எழுத்தனுபவமும்
பெண்மை குறித்த பார்வையும்
இவை எல்லாம் கலந்த பேச்சும் - ஆயுதமாய்……..
------<>-------

கற்றவற்றையும்
பெற்றவற்றையும் கலந்து
இப்படி எழுதும் கவிதைகளும்
என் முப்பத்தி இரண்டு வயது
இளமையும் - என் வாகனமாய்.....
------<>-------

ஒரு மாயாவியைப் போல
தோல் செருப்பு உதவியுடன் ஒலி எழுப்பி
எதிர் கொள்வோர் - மனம் அதிர
நடந்து….. நடந்து….. நடந்து….. நடந்து….. நடந்து…..

------<>-------
வயதிற்க்கு வந்த மகளின் அப்பாவிற்க்கும்
சமீபத்தில் திருமணமான என் தோழியின் கணவருக்கும்
அழகான தோழியர் உள்ள என் தோழிகளுக்கும்
இரண்டு குழந்தைகளுக்கு தாயான - என்
அண்ணியின் கணவருக்கும்

சில அழைப்புகளை மறுக்க முடியாமல் விருந்தாளியாகி
சில நாட்கள் குலவியதற்க்கு பின்
என்னுள்ளும்

இப்போதெல்லாம்
முறுக்கு மீசையும்
பிள்ளையார் தொப்பையும்
கிழட்டு மாடும்
குடு குடு பை - யுடன்
கண்களை குருடாக்க கை நிறைய கரப்புமாய்…..
நானும் ஒரு பிள்ளை பிடிப்பவனாய்
எனக்கே தெரியாமல்….
------<>-------
மனுஷம்
21-01-02
நாகர்கோவில்

Saturday, April 5, 2008

பகுத்தறிவோம்….

கறுப்பு சட்டை போட்டு-நடிப்புக்கு கூட
கோவில் படியேறாத நடிகன்
கோவணம் கட்டும் போது
பட பிடிப்பு வெளிச்சத்தில் - பட்டு தெறித்தது
அறைஞான் கயிற்றில் கட்டப் பட்டிருந்த
அரச மரத்தடி சாமியார் மந்தரித்து கொடுத்த
வெள்ளித் தாயத்து…………..
அவனது தலைவரின்


கழுத்து மஞ்சள் துண்டைப் போல….

ஆசயன்
10-08-07

உன்னுடன் பேசாமல் இருந்த போது….


எங்கே நிறுத்துவதென தெரியாமல்
நிறுத்தி உண்ட உணவு

உணர்ச்சிகலின் வடிகாலாய் ஒரு
மோட்டார் வாக(கா)ன பயணம்

கள்ளச் சந்தையில் சினிமா முடித்து வீடு சேர்ந்தேன்
போலிசுக்கு பயந்து..

உறங்காமல்
உறக்கத்திற்க்கு மருந்தாய்- இக்கவிதைகள்

இப்படி எதுவுமே மாறவில்லை- என் வாழ்க்கையில்

நாம் இருவரும் பேச வேன்டாம் எனத்
தீர்மானித்ததில் இருந்து - இது
எத்தனையாவது நாள்- தெரியவில்லை….

சலனமற்று கை பேசியும்
சடலமாய் நானும்…

மனுஷம்
29-07-07
1:15 காலை

காலம்…


என்றோ இறந்து போன - சுவற்க் கடிகாரத்தையும்
உயிற்ப்பித்து போனது- காலம்
அந்த ஒரு விநாடியில்
தினம் இரு முறையாவது…

மனுஷம்
9-8-06

காய்ச்சலின் காரணம்………..



எங்கிருந்து தொடங்கியது - இது

வெரும் வயிற்றில் கரும்புசாரு - இரு குவளை
ஐஸ் சேர்த்துத்தான்-சிரிதே

அத்தை வீட்டில் மீன்குழம்பு-நேற்று செய்தது

ஜுரம் வந்த நன்பனின் அருகாமை…

தூக்கமில்லா இரவுகலில் மூன்று குவலை மது

உச்சி வெய்யில் அலைந்து அலுவலக ஏ/சி இருக்கை

இரவு முழுவதும் உலக கோப்பை கால்பந்து
சின்னத் திரையில் ...............
(என் பேச்சை யாரு கேக்கறா..அடுப்படி அம்மா)

அலுவலக தோழனுடன் குளிர்ந்த பீருடன்
ரோட்டோர பிரியாணி

கதவு திறந்து வைத்து இரயில் பயணம் சன்னலோரத்தில்

கை வலிக்கிறது இதற்க்கு மேல் எழுத முடியாமல்
சோர்வாய்
இருமி
இருமி
இந்த பாழாய்ப் போன _ காரணம் தெரியா
காய்ச்சலுடன் நான்…..,

ஆசயன்
20-07-06

முரன்…


நேற்று நடந்த இரயில் விபத்தில்
அகால மரணமடைந்த
அலுவலகத் தோழனின்-(மரண)
மௌன அஞ்சலியில் ஒலித்தது……
அவனுக்கு மிகவும் பிடித்த ரிங் டோன்- சத்தமாய்
யாரோ ஒருவரின் அலை பேசியில் இருந்து…

ஆசயன்
20-07-06

Friday, March 28, 2008

ரோஸ் என்னும் திருநங்கை .........


சில வாரங்களுக்கு முன் மக்கள் தொலைக் காட்சியில் இந்த திருநங்கையை நேர் காணல் செய்த ஆணாதிக்கம் கொண்ட, வயதான வெள்ளை வேட்டி பெரியவருக்கு சமர்ப்பனம் இந்த கட்டுரை …..

இப்படிக்கு ரோஸ்….விஜய் தொலைக் காட்சி..வியாழன் இரவு 10 மணிக்கு…

இரவு மணி 10…மாத்ருபூதங்கலையும்,ஷர்மிலாக்களையும் நமக்கு அறிமுகப்படுதிய விஜய் தொ.கா இருந்து மற்றுமொறு மிட் நைட் மசாலா/பாலியல் கல்வி…….உங்களுக்கு எது வசதியோ அந்த பெயரில் ஒரு நிகழ்ச்சி….

ரோஸ் என்னும் ஒரு திருநங்கை…தொகுப்பாளினியாக. இந்நிகழ்ச்சி தமிழ் கலாசாரத்தை அழிப்பதாக ஒரு வலைத் தலத்தில் ஒரு தமிழன் எழுதியதை படித்து தான் தெரிந்து கொன்டேன். இந்நிகழ்ச்சியை….

ஆம் இது கலாச்சார சீரழிவுதான்…
எட்டு மணிக்கு மழை நடனம் குடும்பத்தோடு ரசிக்கும் நமக்கு…
50 வயது அம்மணி நடு அரங்கில் குத்தாட்டம் போடுவதை
குடும்பத்தோடு ரசிக்கும் நமக்கு…
ஐ லவ் யு மச்சா………….க்கு ஏங்கும் நமக்கு…
ஆம்…… இது கலாச்சார சீரழிவுதான்…

இரவு 10 மணி என்ற போதே target audience-ம் Targeted message-ம் புரிபட்டு விடுகிறது….

கதாநாயகியின் கழுத்தில் ஒரு மஞ்சள் கயிறு மட்டும் கட்டி விட்டு அவளை எத்தனை ஆபாசமாக வேண்டுமானலும் சித்தரிக்கலாம் என்ற வெள்ளித் திரையின் மரபுப் படி …சின்னத் திரையில் sex education என்ற பெயரில் இப்படி ஒரு நிகழ்ச்சி…

இந்த தராசின்படி நியாயப் படுத்தப் பட்டன…BPO இரவு நேர லீலைகள்,காமம்,Dating..Partying, மற்றும் நேற்று இரவு நடந்த சல்லாபங்களின் வர்ணனை ஒரு BPO பெண்ணிடமிருந்து நேரலையாய்…

மூன்றாவது நடுவராய் பெண்ணியத்தை ஆதரித்தே தீருவது என்ற முடிவுடன் ஒரு பெண் மனோதத்துவ நிபுணர்….ஆரஞ்சு நிற குர்தாவில்…Dr.ருத்ரணிஸம் பேசிக்கொண்டே…

Rose BE,MS(USA)., வருக திரு நங்கைகளின் அடையாளமே. உமக்கு கொடுக்கப் பட்ட ஆணைகளுக்கேற்ப்ப கால் மேல் கால் இட்டமர்ந்து…(பாதுகாப்பின்மையின் அடையாளம் உனக்குமா.. …?)
மார்பக மேடு பள்ளங்களை காட்ட அடிக்கடி குனிந்து…
அழகாய் சிரித்து மயக்கும் விதமாய் பேசி…
பரிதாபமாய் இருக்கிறது திருனநங்கையரின் நிலை….
இரயிலில் கை தட்டுவோர்…
கடைத் தெருவில் வழி மறிப்போர்…
மெரினாவில் வியாபாரமா(க்கு)வோர்....
இப்போது விஜய் தொ.கா நீயும்….

என்று கிடைக்கப் போகிறது விடுதலை
என் குல திரு நங்கைகளுக்கு……….

நிகழ்ச்சிக்கு வருவோம்.,IT Industry & Immoral Sex இது தான் நிகழ்ச்சிக் கரு. எல்லோரும் நல்லவர்தாம் _ வாய்ப்பு கிடைக்காதவரை.,எல்லோரும் உத்தமர்தாம் _ திருட்டு அம்பலமாகும்வரை…

தீர்வுதான் என்ன…?இரவு நேர பணிக்கு தன் மனைவியை, தன் தமக்கையை, தன் மகளை
அனுப்ப மறுக்கும் பெற்றோராய், அவர்களின் சம்பளத்தை மதிக்காத பெற்றோராய் இருப்பது ஒன்றே தீர்வு.இது தற்காலிகமே என்றாலும்..

Rose சொல்வதுபோல..இரவு என்பது காமத்திற்க்கும்,பகிற்தலுக்கான நேரம், எதிர் பாலினத்தின் அழகான அருகாமை., பணம், வாய்ப்பு,
i-Pill, இவை எல்லாவற்றயும் வீழ்த்தி வீறு நடை போடும்
தமிழ்த் தலைமுறையை எதிர்பார்ப்போம்-ஏமாற்றங்களை பற்றி கவலைப்படாமல்…

நடைமுறை வாழ்க்கை வாழ்வோருக்கு-நாளை முதல்
இப்படிக்கு வாடாமல்லி….சன் தொலைக் காட்சி..வியழன் இரவு 10 மணிக்கு, இப்படிக்கு காகிதப் பூ..கலைஞர் தொலைக் காட்சி..வியழன் இரவு 10 மணிக்கு…எதிர்பார்ப்போம்-வெகு விரைவில்….

மனுஷம்
மார்சு 26,2008






Sunday, March 23, 2008

கோ.. வி.. தா.. ப.. ம்……. பாகம் ---7

என் சகதர்மினிக்கு ………
-------------------------------------------------------------------------

எத்தனை இரவுகள்….எத்தனை இரவுகள்….
எங்கே போனது எந்தன் இரவுகள்….

எத்தனை இரவுகள்….எத்தனை இரவுகள்….
எஞ்சி இருப்பது எத்தனை இரவுகள்….

எத்தனை இரவுகள்….எத்தனை இரவுகள்….
விடிந்து போனவை எத்தனை இரவுகள்….

எத்தனை இரவுகள்….எத்தனை இரவுகள்….
விடியாமல் போனவை எத்தனை இரவுகள்….
--------<>-----------

என்னை வென்று சென்றவளின்- வெற்றிக்கு
அவள் தகுதியானவள் தான்..-எனெனில்
தோற்றது நான்….-பெருமைப் படுகிறேன்
இந்த தோல்விக்காகவும்
அந்த வெற்றிக்காகவும்……
--------<>-----------
I Know What Know _ But
I don’t know what I don’t know
--------<>-----------
நடு முதுகுக்கு நடுவில் _ கைக்கெட்டா தூரத்தில்
அந்த அழகான அழுக்கு ஒட்டிக் கொன்டிருக்கிறது
(நடு முதுகு மச்சம் நல்லதுடா-அம்மாவின் குரல் அடுப்படியிலிருந்து…..)
காத்துக் கொன்டிருக்கிறோம்
நானும்_ அந்த அழுக்கும்
நீ வந்து முதுகு தேய்த்து விடும்_ நன் நாளை நோக்கி

--------<>-----------

உணவு எடுக்க வரும் எல்லா
சிறு மீன்களையும் விரட்டுகிரது- சட்டாம்பிள்ளை
அந்த கறுப்பு தேவதை
கொன்று விடட்டுமா என்ற கேட்டதற்க்கு
வேண்டாம் என்கின்றன இந்த குட்டி மீன்கள்..
நீ யார் பக்கம் என் சகதர்மினி…?
--------<>-----------

எல்லா கவிதைகளையும்
ஒன்றன் பின் ஒன்றாக
ஒரே மொழியில்
இருக்க வேன்டுமா என்ன…?

Snapshots

postmodernism

surrealism
Montage
Collage
Modern Art _ வரிசையில்
இதோ என் கோவிதாபம்..

புரிந்தவர்கள் சிந்தியுங்கள் அமைதியாய்…….
புரியாதவர்கள் பாராட்டி பேசுங்கள் சத்தமாய்…

எந்த கருத்துமின்றி வாசகனாய் _ நான்
வெளி இல்லா வெளி ஆளாய்….

பார்வையாளனாய் வேடிக்கை பார்ப்பவர்களை பற்றி
எனக்கு கவலை இல்லை……

“Hope you are not the One”
--------<>-----------

இளைப்பாற வேன்டும் _ சிறிதே
நீயும் சற்று உலர்ந்தெழு..
மற்றொறு நாள் சந்திப்போம்
மலர்ச்சியாய்…..

A/C Chaircar-இல் சுஜாதாவின் கணயாழியின் கடைசிப் பக்கம்……..


நீலக் கலர் இரயில் இருக்கையில்- இருக்கயில்
இருந்த சில்லிப்பு…
சற்று முன்பே எழுந்து சென்ற போதும்…

பக்கத்து இருக்கை தம்பதியின்
பகிறங்க பகல் நேர உடல் உறவு
அனைத்து- அனைத்து ஆடைகளுடன்
எல்லார் மத்தியிலும்
கையோடு கை சேர்த்து
தோளோடு தோல் சேர்த்து…
உறங்கும்போது தலை சாய்க்காமல் _ தோளில்
தோளில் தலை சாய்ப்பதற்க்காக உறங்கிக் கொன்டு
உறங்காமல்…..

நேற்று நேர்த்திக் கடன் முடித்து
முருக வேலின் வேல் தூக்கிய வலி _ இரு தோள்களிலும்
உறங்காமல் நடந்த கால்கள் அயராத உறக்கம் வேண்டும்
பிடிவாதமாய் தூங்க விடத _ பின் புற அழகு குழந்தையின்
பிடிவாதத்தின் வீரு கொன்ட பேறிரைச்சல்

இவற்றிற்க்கு இடையே வேறு வழியின்றி
படிக்கத் தொடங்கியது தான்- இப்புத்தகம்
ஒரு அதி மேதாவியின் வரிகளுக்குள்-இந்த
அதி மேதாவியை அடையாளம் கண்டுகொன்ட
இனம் காணலில்(கானலில்) மூழ்கி
சுகித்து…
சிரித்து….
ரசித்து….
மகிழ்ந்து….
போகித்து…
பகிற முடியாமல்- எதிராளியிடம்
கழிவிரக்கத்துடன்
உச்ச நிலை அடைந்து _ முடிவு கன்டு
முழுத் திருப்தி அடைந்தவுடன் வெட்கமில்லாமல்
படிக்க தொடங்கினேன் மீண்டும் _ சுய
இன்பம் செய்வதை போல
நாற்றமடிக்காமல்…
ஈரமாக்காமல்…..

மழைத் துளியின் திசை…

கிழக்கு….
மேற்கு….
வடக்கு….
தெற்கு….

தென் கிழக்கு பருவ மழை….
வட கிழக்கு பருவ மழை….
தென் மேற்கு பருவ மழை….
வட மேற்கு பருவ மழை….


எந்த திசையயையும்
எத்தனை முறை பார்த்தாலும்
திசை கான முடிவதில்லை

சற்று முன் என் முகத்தில் பட்டு தெரித்த
மழைத்துளியின்
ஆதியும்
அந்தமும்
அதன் திசையும்…….

உச்சி வெய்யிலில் ஒரு நாள்….



குட்டை தண்ணீர்
இரன்டு நாளில் வற்றி விடும்

வயிற்றை கலக்கியது…..
குட்டை மீன்களுக்கும்

வயிற்றை கலக்கியதால்
கால் கழுக வந்தவனுக்கும்….

எழுத்தாளனா(க்)கிய நான்….


எப்போதும் யாரோ-உடைந்த
சிலேட்டு பலகையில் கவிதை எழுதி
கண் முன் காட்டுவதை போல ………..

கை பிடித்து
கையில் எழுது கோல் பிடித்து
காதலியின் வாஞ்சனையுடன்
குருவின் ஆசியுடன்
யாரோ எழுதிச் செல்வதைப் போல………

அழகான கருவை எழுதி முடிக்கும் முன்
இறந்து போன அற்ப அயுசு கவிஞனின்-ஆவி
என்னுள் புகுந்து எழுதுவதைப் போல….
பயமாய்-ஆனால் கையெழுத்து தெளிவாய் கிறுக்காமல்….

என் எல்லா கவிதைகளையும் _ மொத்தத்தில்
நான் எழுதாமல் யாருடயதாகவோ…….
மாற்றான் மனைவியாய் _ எப்பொழுதும் அழகாய்…
அடுத்த வீட்டு குழந்தையாய்
எட்டி நின்று பார்க்கத்தான் முடிகிறது….

இந்த கவிதையையும் சேர்த்து _ ஆனாலும்
எழுதிக்கொன்டு இருக்கிறேன்
நிறுத்த முடியாமல்…..

மனுஷம்

கோ.. வி.. தா.. ப.. ம்……. பாகம் ---8

பதங்கமாகி…….
----------------------------------------------------------------
மரணம் வந்து
மரித்து போன _ஒரு
மாலை வேலையில் எழுத முடியாமல் போகலாம்
இது போன்ற ஒரு கவிதை
மாலை நேரத்தில்…..
------ <> ------
சொல்லிவிட்டு போவது தான்
தமிழனின் மரபு
போகும் முன் சொல்லி விடுகிறேன்
தமிழனாய்…
இறந்த போதும்..(இதை வினை சொல்லில் படிக்கவும்…)
------ <> ------
வேகமாய் என்னை கடந்து போகும்_பேருந்தின்
சக்கரத்தில் ஒட்டிய
சதைக் கூழமாய்….
சற்று முன் பச்சை விளக்கை கடந்த
இரயிலின் முன்புற விளக்கின் கண்ணாடியில்
இரத்த சிவப்பாய்….
நேற்று முன் தினம் மின்சாரத்தில் கருகிப்போன
நானின் மாமிச வாடை
இந்த மூடிய கதவுகளுக்கிடையில் கசிந்து….
------ <> ------
உயிராய் உடலாய் நான்
உயிர் பிரியும் போது
உடலும் பிரிய வேன்டும்
_யார் கண்ணிலும் படாமல்
பதங்கமாதல் போல…….
இது பதங்கமாகாமல் போனவனின் கடைசி ஆசை…
------ <> ------
எப்போது நிற்கும்
இடை விடாது ஓடிக் கொன்டிருக்கும்
ஓய்வு விரும்பும்
மரணத்தை “தொட்டு” சொல்லிவிட்டு செல்லும்
கூடிய விரைவில் நிகழும்
_என சுவற்று பல்லியாய்
கட்டியம் கூறும்..
பாவப்பட்ட எனது இரு சக்கர வாகனமும்
துள்ளி… துள்ளி… ஓடும் எனது இதயமும்
என்னை புரிந்தவாறே……..
------ <> ------

கொசு
பளிரென அடித்து
வயிற்று இரத்தம்
பார்த்தவுடன்தான் திருப்தி அடைந்தேன்
கயிற்று சுருக்கு கழுத்தை நெறிக்கும் போதும்
முழுதாய், இரத்ததுடன் சாகத்தான்
எத்தனை ஆசை……
------ <> ------
நீளமாய்
குறுக்கும், நெடுக்காய்
குறுக்கு, நெடுக்கு, நீளமாய்….
கடந்த வாரம் வாங்கி வந்த காய்கறி
வெட்டும் உபகரணத்தால்…
அழகாய் வெட்டி பரிமாற வேன்டும்
எனது அழகான………
பருத்த………..
நீளமான ……………
கடவுளை பழி வாங்க
இதை விட வேறு வழி தெரியவில்லை…
------ <> ------

பசிக்கு உணவில்லை என் வாழ்க்கையில்
உனவு கிடைக்கும் போதுதான் பசியும்…
வேன்டிகொள்கிறேன்
அத்தியவசியமான மரணம்
அவசியமான தருனங்களில்-மீதமிருக்கும்
சில நொடிப் பொழுது வாழ்க்கையிலாவது…
பசிக்கு உணவு போல..
------ <> ------

இந்த பக்கமாய் நீங்கள் வரும்போது
சந்திப்போம்
வீடு
சுடுகாட்டு மதிலுகள் தாண்டி இந்த பக்கம்…..



(திரு) அமரன் மனுஷம்

Saturday, March 22, 2008

என் கடந்தவார நாட் குறிப்பில் இருந்து......


இரு கை தேய்த்து விழிப்பு..

குளியல் முடித்து ஹநுமந் கோவில்



அம்மாவின் நிறைய திட்டுகளும்,

இரண்டு இட்டிலிகளுடன் உணவு ...



காலையில்

டேக் கார்டு -பிரெண்ச் திரைப்படம் சத்தியம் திரை வளாகத்தில்



தாலப்பா கட்டு கோழி பிரியாணி

போலந்து நாட்டு திரைப்படம் -தென் இந்திய திரைப்பட வர்த்தக சங்கம் மாலையில்...




அருணாசால இன் -இல் செங் பைபர் ஒரு குப்பி

பேசண்ட் நகர் பேவாட்ச்-இல் இத்தாலிய பாஸ்தா

இரவில்.....



அர்ச்சனைகளுடன் அம்மா

பாதி உறக்கத்தில் கதவு திறந்துவிட்டு...... நடு இரவில்



ஆனந்தமாய் என் இடுப்பை கட்டிப்பிடித்து

என் மீது கால் தூக்கி போட்டுக்கொண்டு


ஏதேதோ உளறிக்கொண்டு...

நாள் முழுதும் ........


நானும் ,இனம் தெரியா வெற்றிடமாய்

அந்த தனிமையும்........




மனுஷம்








பார்த்ததில் பிடித்தது....