Thursday, May 23, 2013

ஜில்லு................சாப்பிட்டு போடா ..................





ஜில்லு................சாப்பிட்டு போடா ..................

வெந்து அவிந்த - கையில் மாவு ஒட்டாத
இட்டிலியை (கைக்கெட்டிய) தட்டில்
குழம்பு மிளகாய் தூளில் - நாலு பூண்டு பல்லை நசுக்கிப் பரிமாறிய
அத்தையின் நினைவுகள் - எப்போதாவது  இட்லி  செய்யும்
சில பட்டினி (பிரமச்சரிய ) இரவுகளில்
மிளகாய் தூளுக்கு பூண்டு பல்லு நசுக்கும் போது ..........................

--------------X---------------------------------

எதிர் பாரா  விதமாய் கலந்து கொண்ட -அந்த அத்தையின் (மரணத்திற்கு பின் )
முப்பது கும்பிடும் நிகழ்வில்
நான் பரிமாறிய சாம்பாரின் மணம்  - நினைவூட்டிச் செல்கிறது -அவள் இருப்பை -  ஏதோ ஒரு இலையின் முன் ....................

--------------X-----------------------------------

பரிமாறும் அறை முழுவதும் விரவிக் கிடக்கிறது - அவள்
என்றோ என் பசியாற்றிய பீன்ஸ்-கேரட் சாம்பாரின் மணம்
நான் மூன்று பந்தி பரிமாறிய
அடுத்த தெரு அம்பிகா பவன் ஹோட்டல் சாம்பரில் இருந்து.........

---------------X-----------------------------------

ஜில்லு................சாப்பிட்டு போடா ..................
 

பார்த்ததில் பிடித்தது....