எல்லா ஆலயங்களையும் சுற்றி வந்த புண்ணியத்தின் ஒரு பாதியும்
எத்தனையோ முறை சுற்றி வந்த வரங்களின் மறுபாதியுமாய் - தோன்றினர் ,சிவனில் ஒரு பாதியும்
பார்வதியில் மறுபாதியுமாய் - என் வேண்டுகோளுக்கிணங்க
வரம் கொடுப்பதற்கு- கேட்டவுடன் வரம் கொடுப்பதற்கு
------------------------%------------------------
அத்தனை (பேர் ) ஆனந்தத்திலும் மறவாமல் கேட்டேன்
எனக்கான பெண்ணை ………..
நான் ஆராதித்த பெண்ணை …………
நான் நேசித்த பெண்ணை …………
என்னுடன் வாழப் போகும் பெண்ணை - வரமாய்
கடந்த வாரம் கடந்து சென்ற திருமண நாள் -தொண்டையில்
முள்ளாய் உறுத்திய போதும் .............
------------------------%--------------------------------
அந்த நடிகையின் கால்கள்
இந்த நடிகையின் இடுப்பு
கடந்து சென்ற பெண்ணின் வண்ணம்
கடந்து சென்றும் (என்னுள்) மறையாத பெண்ணின் வளம்
தெருவில் பார்த்தவளின் உயரம்
திரும்பாமல் போனவளின் மணம்
கனவில் வந்தவளின் --------------------------
கலையாமல் போனவளின் --------------------------
நான் பார்த்து வியந்தவளின் தைரியம்
என்னை வாரிச் சென்றவளின் சிரிப்பு
------------------------------------------
------------------------------------------
இவை அனைத்தும் ஒருங்கே அமைந்த - எனக்கான உன்னை
நானே வடிவமைத்து
திருமணம் புரிந்து
கடந்து செல்லும் தருணங்கள் - ஒவ்வொன்றும் சொர்க்கமாய்
வாழ்ந்து மடிய ,வரம் கேட்டேன்- கேட்டவுடன்
வரம் கிடைக்குமென்று .....................
---------------------%-----------------------
மனைவி ............
எனக்கும் அவளுக்குமான இடைவெளி நீண்டு கொண்டே-
முடிவில்லா முற்றுப் புள்ளியாய் .......
ரசனைகளால் ...........
விருப்பங்களால் ……………
குறிக்கோள்களால் ……………
திசை தெரியா இலக்குகளால் …………..
திருமணம் என்னும் சந்திப்பில் இருவரும்
வெவ்வேறு திசை நோக்கி பயணிப்பது
தவிர்க்க முடியாததாகி விடுகிறது- தற்போதய விடியல்களில்
எதிரெதிரே சந்தித்து கொண்டாலும்(விபத்தாய்)-பேசாமல்
அந்நியர்களாய் ...................
--------------------------$--------------------------------
தந்தேன் வரம்- இரட்டை குரலில் ஒருமித்து- வரம்
தந்து மறைந்தனர்,அம்மையும், அப்பனும் …..
---------------------$----------------------------
(இரு ) ஒளிப் பிரவாகம் ஒன்றாய் மின்னி மறைந்த
ஒற்றைப் புள்ளியில் இருந்து நடந்து வந்தாள் - என் தேவதை
என் அனைத்து வேண்டு கோள்களை ஒன்றிணைத்து .......................
-----------------$-------------------------
பெருமிதம் பொங்க
ஆசை அடங்கா விழிகளுடன்
அகம்( )பாவம் தெறிக்க - அந்த
மலர் பொன் பாத விரல்கள் நோக்க, நான் .
அழகாய் புன்னைகைத்து கேட்டாள் அவள்
"அம்மா வரலயாப்ப்பா ...?''
--------------------------%------------------------
சற்று முன் கண்ணாடிப் போட்ட
அழுது வீங்கிய கண்களுடன் - சிவப்பு /பச்சை உடை அணிந்த
நடு வயது (பேதை/ பெதும்பை) மனைவி
சென்ற திசை நோக்கி நடப்பதும் சிரமமாகி விடுகிறது
இது போன்ற தருணங்களில்- மனைவி நடந்து மறைந்த
தெரியாத திசைகளில்