Sunday, December 11, 2011

ஒய் திஸ் கொல வெறி காலத்தின் ஒரு முன் இரவுப் (பனிப்)பொழுதில்......


ஒய் திஸ் கொல வெறி காலத்தின்
ஒரு முன் இரவுப் (பனிப்)பொழுதில்...............................................

-----------------------------------------------------------------------------------


வருடக்கணக்காக சுபமங்களா / காலச்சுவடு வாசித்த பின்பும்
அகனாழிகை அறிமுகமும்
விகடன் கவிதைகளின் பாதிப்பும்
நாஞ்சில் நாடன்,வண்ண நிலவன்,பிரமிள்,அப்துல்
ரஹ்மான் முதல் தபு சங்கர் கவித் தோழமை கிடைத்தும்

(சொந்த/கவிதை) குறுந்தளத்தில்(aasayan.blogspot.com)
வாசகர் வருகை/பின்னூட்டம்
6967 கடந்த பின்பும்-சக வாசகனாய்
(மாற்றான் தாய் மனப்பன்மையுடன்)- என்
கவிதைகளை நானே ரசித்த பின்பும்

கட்டை விரல் காணிக்கையாக்க முடியா-ஏகலைவனாய்
குரு, வைரமுத்துவை ஏற்றுக் கொண்ட பின்பும்

( எத்தனை குருக்கள்................?.,
இருப்பதோ நான்கு கட்டை விரல்
இட ஒதுக்கீடும் இடமளிக்காது
குருக்களின் வர்ணம் தெரியாதவரை...............)

விகடனுக்கு அனுப்பப்பட்ட - என் கவிதைகள்
பெர்முடா முக்கோணத்தில் அமிழ்ந்து மறையும்-விதி

விகடன் தேர்வுக் குழு உறுப்பினரின் வாசிப்பும்
கவிதை குறித்த அவரது அளவு கோளின் அள(ல)வையும்
அவரது அன்றைய குடும்ப வானிலையும் /
சென்னை போக்குவரத்தும்
மேலாளர்/பதிப்பாளர் மன நிலையும்
மேற்கொண்டவை தவிர மற்றவையும் மட்டுமே
நிர்ணயிக்கக் கூடும்- என்

கவிதைகளின் தரத்தையும்
சம கவிதைகளோடு போட்டியிடும் பலத்தையும்-மற்றும்
வெற்றிக்கும் தோல்விக்கும் இடைப்பட்ட
தொலைவையும்...................

ஹைப்பொதீசீஸ்(உத்தேசம்)-1

அழகின் உறைவிடம்-அதை
எதிர் கொள்ளும் இரு கண்களிடமிருந்து மட்டுமே

ஹைப்பொதீசீஸ்(உத்தேசம்)-2 -

சுபமங்களா / காலச்சுவடு வாசகரா(னா)ன
(*** நன்றி சன் தொலைக்காட்சி செய்திக் குழு) கவிதை தேர்வுக்குழு
உறுப்பினருக்கு…………………………

வெளியில்லா வெற்றிடப் பிரபஞ்சத்தின் (தண்)நீர் போல்
உருவமில்லா....
சுவை இல்லா...
மணம் இல்லா...
இல்லாமல்......

வெற்றிடத்தின் வாயிலின்
ஒன்றுக்கொன்று துணையாய்

அழகும்
என் கவிதைகளும்


விகடனில் தனது முதல் கவிதை வெளிவரக்
காத்திருக்கும்

மனுஷம்

ஜெட் வானஊர்தி
(நடு.....................?) வானில் ஏதோ ஒரு புள்ளி
10-12-2011
21:54

பார்த்ததில் பிடித்தது....