குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை வரிசையில் ஆறாம் தினையாக ஆண்..... ஆணும், அவன் சார்ந்த உலகமும்...
Saturday, August 2, 2008
நேரலையில் ஒரு கைக்கிளைக் கடிதம்…......பகுதி-I..........................…..(ஜுலை முதல் செப்டம்பர் வரை)
நீ……
என் இத்தனை வயது பாவங்களுக்கும் பரிசு
உன் காதலா….
உன் பிரிவா..?
…………..<>…………………
நான் பார்த்ததை
ரசித்ததை
படித்ததை
கேட்டதை
மொத்தத்தில் யாரிடமும் -என்னை
பகிர முடியாமல் தவிக்கிறேனே இன்று ..
உன்னை தவிர
இதற்க்கு பெயர்தான் காதலா..?
…………..<>…………………
என்ன செய்யப் போகிறேன் …
நீ இல்லாமல் இனி.....
வழக்கம் போல
உறக்கமில்லா நடுநிசிகளில்
அலைபேசியில்
ஏழு நாட்கள் சண்டைக்குப் பின் சமாதானமாய்…
நானும் உனக்கான இடத்தில்
உன் சக்களத்தியாய்
அழகாய் அந்த தனிமையும்…
…………..<>…………………
அந்த பொண்ணுக்கு இந்த மாப்பிளையா..?
உன் நிச்சயத்திற்க்கு சென்று வந்த
என் அப்பவித் தாயாரின் ஆதங்கம்..
எல்லாம் தெரிந்தா..?
எதுவும் தெரியாமலா..?
எதுவும் தெரியாமல் நான்…..
…………..<>…………………
பெண்ணடிமைத்தனம் என்றோ
ஆணாதிக்கம் என்றோ கூறிக்கொள்..
எனக்கான நீ
அவனருகில் – உன் திருமண நிச்சயத்தில்
காதலை விட பொறாமையே பெரிதாய்…
எனக்கான ஏதோ ஒன்றை
யாரோ தட்டிப் பறித்துச் சென்று
என் முகத்தருகே
பரிகாசம் செய்வதைப் போல….
…………..<>…………………
உன்னை தோழி என்றால் அது
தோழமைக்கு இழுக்கு
உன்னை காதலி என்றால் அது
காதலுக்கு இழுக்கு
என்ன சொல்ல…?
…………..<>…………………
தொக்கி நிற்கின்றன
நான் இப்பொழுது எழுதும் எல்லா கவிதைகளும்
முடிவில்லாமல்…….
வாழ்க்கையயைப் போல..
முடிவில்லா சுதந்திரத்தில் அனந்தமாய்
தத்தளித்துக் கொண்டே….
…………..<>…………………
நிச்சயம்
நிச்சயம் வரை இது போதும்..
இன்னும் ............. நாட்கள் – உன் திருமணத்திற்க்கு
வலிக்க
வலிக்க
நிறைய எழுதுவேன்- காத்திருங்கள் நீங்களும்
வலிக்க
வலிக்க…….
Subscribe to:
Post Comments (Atom)
7 comments:
தொடரும் கவிதைத் தொகுப்பை படிக்க காத்திருக்கும்
கோவை விஜய்
http://pugaippezhai.blogspot.com/
நன்றி விஜய்
முழுவதும் படித்து கருத்துக்களை பகிரவும்
நன்றி விஜய்
முழுவதும் படித்து கருத்துக்களை பகிரவும்
kavithai super
நன்றி தோழர் கடையம் ஆனந்த்
hmm hmmm ithu oru thodarum meha seriala irukumooo.. kathal kavithai romba vendam anbaray. unnudiya attral atharkul matum muzhigi vida vendam oru rasiganin yasagam
படைப்பது மட்டுமே நான்
கற்றுக் கொடுப்பதோ- காலம்
எய்தவன் இருக்க அம்பை
நோவததேன்.............?
ஹி ஹி ஹி
Post a Comment