Monday, January 18, 2010

புன்னகை..?




காரணங்கள் இல்லா தருணங்களில்
கண்ணிமைக்கும் நேரத்தில்
வேலைப் பலுவிற்கு இடைப்பட்ட சில நொடிகளில்
மனைவியின் ஊடலுக்கு நடுவில்
எப்பொழுதேனும் வந்து போகும்- இனம் தெரியாப்
புன்னகைக்கு மட்டும்
தெரியும் ரகசியமாய்…

முடிவில்லா குகைவரையின்
ஏதோ ஒரு மூலையில் ஒட்டிக் கொண்டிருக்கும்- உன்
நினைவுகளின் நிழலாய் தெரிகிறது

“ஏன் சிரிச்சிங்க…?” என்ற என் சகதர்மினியின்
கேள்விக்கு விடை கூற முடியா
இந்த (அடையாளமில்லாப்) புன்னகை..?

பார்த்ததில் பிடித்தது....