Sunday, April 6, 2008

குடுகுடுப்பைக்காரன் என்ற பிள்ளை பிடிப்பவன் ......................................கோ.. வி.. தா.. ப.. ம்……. பாகம் ---6


பிள்ளை பிடிப்பவன்.....

யாருக்கு தெரியும் - பிள்ளை
பிடிப்பவன் எப்படி இருப்பன் என்று..

சின்னஞ்சிறு வயதில்
எனக்கு ராச் சோறு ஊட்டியதில்
அந்த குடுகுடுப்பைக்காரணுக்கும்
பெரும் பங்கு உண்டு-பிள்ளை பிடிப்பவன் என்ற போர்வையில்
கருப்பு நிறத்தில் சிவப்பு கரையுடன்….
------<>-------
முறுக்கு மீசையும்
பிள்ளையார் தொப்பையும்
கிழட்டு மாடும்-அதன் மேல்
பழயதாய்
அழியாத மெருகுடன்
கண்ணாடி ஆடையுமாய்-செத்துப் போன
மாட்டின் தோலில் செய்த செருப்பும்
குடு குடு பை யுடன் - பெயற்க்காரணமாய்…
------<>-------
இராத்திரி வேளையில்…
அந்த வயதில்
அவன் வருகைச் சத்தம் கேட்கும் போது - என்னை
கடத்தி சென்று
இரண்டு கண்ணில் கரப்பு கட்டி- குருடனாக்கி
மூலதனமில்லா வியாபாரத்திற்க்கு
என்னை அழைத்து செல்வது போல……

இது தான் பிள்ளை பிடிப்பவன் என்ற
குடுகுடுப்பைக்காரன் பற்றி
என் மனதில் இன்றும்….
------<>-------
சிகப்பு தோலும்
வட்ட முகமும்
முத்து பல் வரிசையும்
மதிப்பு மிக்க ஆடைகலும்
நுனி நாக்கு ஆங்கிலமும்
ஐந்து இலக்க சம்பளமும்
நறுமண கவசமும் - அணிகலன்கலாய்……………
------<>-------

முற்போக்கு இலக்கியமும்
நவீன திரைப் படங்களும் – இதன்
தொழில் நுட்பங்களும்,
ஒளிப்பதிவும்
ஓவியமும்
பின் நவீனத்துவமும்
நாடக பரிச்சயமும்
எழுத்தனுபவமும்
பெண்மை குறித்த பார்வையும்
இவை எல்லாம் கலந்த பேச்சும் - ஆயுதமாய்……..
------<>-------

கற்றவற்றையும்
பெற்றவற்றையும் கலந்து
இப்படி எழுதும் கவிதைகளும்
என் முப்பத்தி இரண்டு வயது
இளமையும் - என் வாகனமாய்.....
------<>-------

ஒரு மாயாவியைப் போல
தோல் செருப்பு உதவியுடன் ஒலி எழுப்பி
எதிர் கொள்வோர் - மனம் அதிர
நடந்து….. நடந்து….. நடந்து….. நடந்து….. நடந்து…..

------<>-------
வயதிற்க்கு வந்த மகளின் அப்பாவிற்க்கும்
சமீபத்தில் திருமணமான என் தோழியின் கணவருக்கும்
அழகான தோழியர் உள்ள என் தோழிகளுக்கும்
இரண்டு குழந்தைகளுக்கு தாயான - என்
அண்ணியின் கணவருக்கும்

சில அழைப்புகளை மறுக்க முடியாமல் விருந்தாளியாகி
சில நாட்கள் குலவியதற்க்கு பின்
என்னுள்ளும்

இப்போதெல்லாம்
முறுக்கு மீசையும்
பிள்ளையார் தொப்பையும்
கிழட்டு மாடும்
குடு குடு பை - யுடன்
கண்களை குருடாக்க கை நிறைய கரப்புமாய்…..
நானும் ஒரு பிள்ளை பிடிப்பவனாய்
எனக்கே தெரியாமல்….
------<>-------
மனுஷம்
21-01-02
நாகர்கோவில்

3 comments:

AKM... வெற்றியூரான்... said...

kalakkittinga ponga.....
ungal kavithayaal naanum ippothu sila nimidangal siru vayathu paalakanaanen.....
nandrikal pala... thangalukku

மனுஷம் said...

nandri abdul.thodarnthu en valai thalathirkku vandhu thangal karuthukkalai pagirnthu sellavavum. thangal nabargalukkum parinthuraikkavum.. nandri

Known Stranger said...

was that photo also made by you

பார்த்ததில் பிடித்தது....