Tuesday, April 8, 2008

NRI புள்ள…


வந்துட்டான்….
கொள்ளிபோட அமெரிக்காவில் இருந்து…
கடைசியாய் அப்பாவை பாக்க
பத்து நிமிடம் கழித்து வந்திருந்தால் கூட
பிணம் கிடைத்திருக்காது…

தாய்க்கு தல புள்ள- தகப்பனுக்கு
கடைசி புள்ள- அதுவும் ஒரே பிள்ளை….
வருவானா..? மாட்டானா…? துடித்து போனது இதயம்
பராவயில்லை..தனியாத்தான் வந்திருக்கான்…

ஈர ஆடை உடுத்தி
கண் கலங்கி
மண் கலயம் சுமந்து
தந்தையை சுற்றி வந்து - கடைசியாய்
மேற்கு நோக்கி நின்று
கலயம் உடைத்து
கொள்ளி வைத்து
முழுவதும் எரித்து
சிறிதே சிறிதாய் - மீதமிருந்த
எலும்புச் சாம்பல் பொருக்கி
கலசத்தில் இட்டு
வீடு திரும்பி
குளித்து, கால் கழுகி அமர்ந்தபோது தான்
சாந்தி அடைந்தது - ஆத்மா(கள்)
சுடுகாட்டுக்கு வந்த நாலு பேருக்கும்
சாவில் கலந்து கொண்ட அனைவருக்கும்…..

சற்று முன் சவமாய் - இப்போது
சாம்பலாய் அந்த அப்பா…

மனுஷம்
24-02-02

1 comment:

Known Stranger said...

romba pidichiruku intha post. may be soon i will be in this same situation.

பார்த்ததில் பிடித்தது....