Saturday, May 10, 2008

அபர்ணா …….கோவிதாபம்-5



எத்தனை பேர் தொட்ட முலை
எத்தனை பேர் விட்ட துளை….

இப்படித்தான் தொடங்குகிறேன்- இந்த கோவிதாபத்தை
நாகரிகம் பற்றி கவலைப் படாமல்
அவசியம் கருதி
இந்த கவிதைக் கருவின் தாலி கட்டிய தந்தையாய் நீ…..

……………….

யார் நீ
கண்ணகியா..?
மாதவியா..?
சாவித்ரியா..?
சொர்ணமுகியா..? _ என் சகியா..?

நான் யாரென்று தெரியாததால் – நீ
யாரென்றும் தெரியவில்லை….

……………………

நீ..
நீ சார்ந்த எல்லாம்..
இந்த தினையில் எதை எழுதினாலும்
வினைத் தொகையாகவே முடிகிறது..
என்னை பொறுத்தவரை…

…………………….

உன்னை நான் எங்கே வைப்பேன்..?
உள்ளேயா..? வெளியேயா..?
மறைத்தா…? ஒளித்தா..?
உனக்கு தெரிந்தா..? தெரியமலா..?
பதிலை எதிர் பார்த்து _ உள்ளம்
நிறைய(யா) காதலுடன் நான்.

உன்னிடம் இருந்தும்- உன்
தாலி கட்டிய கணவனிடம் இருந்தும் _ நீ
காதலிக்கும் உன் காதலினடம் இருந்தும்………

……………………….

தினம் தினம் தலை மூழ்குகிறேன்..
எல்லா சோப்பும் தேய்த்தாகி விட்டது
இரண்டு வேலை குளிக்கிறேன்- சென்னையில்
இந்த கோடையிலும்

குளத்தில்
நதியில்
ஓடையில்
கடலில்_ எல்லா முயற்ச்சியும் பொய்த்துப் போனது
தினமும் குளித்தவுடன்
உடல் முழுவதும்
உடனடி அழுக்காய்
என் இரத்ததில் இருந்து _ என்
மரணம் வரை
வியர்வையாய்- நீயும் உன் நினைவுகளும்….

……………………….

கண்ணடி உருவமாய் நீ…
அழகாய்
தெள்ளத் தெளிவாய்
என்னுடன் வந்து _ நான்
பார்க்கும் போது உன்னைக் காட்டி
என்னுடன் நகர்ந்து மறையும்
(படம்) பிடிக்க முடியா மாயப் பிம்பமாய்….
ஐந்தாம் வகுப்பு அறிவியல் பாடம் சொல்வது போல…

……………………………

இருமனம் கொன்ட திருமண வாழ்வில்…………
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

கரையினில் ஆடும் நானலே நீ _ நதியிடம்
சொந்தம் தேடுகிறாய்…

நம்மைப் பொறுத்தவரை இதில்

நதி யார்..?
நானல் யார்..?
……………………
ஒரு உரையாடலின் போது
சாதாரணமாக, சதா ரணமாக தான் வந்து விழுந்தன
நீ தொழிற் பெண்ணன விதமும்
அதற்க்கு நீ கொடுத்த விலைகளும்

கிட்டிய பொருள் தரமென்றால்
கொடுத்த விலையும் தரமே..
ஏனெனில் பெண்ணே இது நீ வாங்கியது- பேரம் பேசி..

விலை பற்றி கூற நீ முன் வந்தாலும்- நீ
விலை போன விலை கேட்க நான் இல்லை.
புண் பட்ட எருதின் மேல் _ சதை
தின்னும் காக்கையல்ல நான்…

………………………………

முற்றுப் புள்ளி
இப்படித்தான் முடிக்க நினைக்கிறேன் இக்கவிதையைய்..
இங்கிருந்தே தொடர்கிறது _ இக்கவிதை
எப்போதும் போல….

…………………………………
ஐந்து வயது குழந்தையின் தாயாய் நீ
அழகான உன் காதல் கணவன்
சமீபத்தில் உன்னுடன் விடுமுறையயை கழித்த நம் நண்பன்
உன்னை பற்றிய கூற்றுக்கள்- அனைத்தும்
பொய்த்துப் போய்
(கெட்ட)கனவாகி
விழித்தெழும்
கோரிக்கையும் ஒன்றாகித்தான் போனது
இப்போதைய என் பிரார்த்தனைப் பட்டியலில்….

No comments:

பார்த்ததில் பிடித்தது....