Thursday, May 8, 2008

எனது ஆசான் ...கவிப் பேரரசு வைரமுத்து.




கண் இமைக்கும் நேரத்தில் கடந்து போனவற்றில் -நாம் கவனிக்காமல் போனவை ஏராளம் ...

அப்படி ஒரு கவிதை உங்களுக்காக..

காதலை

பிரிவை

காமத்தை

விரகத்தை

ஏக்கத்தை

சங்கமத்தின் நிறைவை...

இன்னும் எத்தனையோ இக்கவிதையில் ....


யாருமில்லா இரவுகளில்

தனிமையான தருணங்களில் வாசித்துப் பாருங்கள் இக்கவிதையை.......
----------------------------------------------------------------------------

உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணித் துளியும்
மரண படுக்கையிலும் மறக்காது கண்மணியே


தொண்ணூறு நிமிடங்கள் தொட்டனைத்த காலம்
தொண்ணூறு ஆண்டுகளாய் இதயத்தை கலக்குதடி...


பார்வையிலே சில நிமிடம்..

பயத்தோடு சில நிமிடம்..

கட்டி அணைத்தபடி கண்ணீரில் சில நிமிடம்...

இலக்கணமே பாராமல்

எல்லா இடங்களிலும் முத்தங்கள் விதைத்த மோகத்தில் சில நிமிடம்....


உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணித் துளியும்
மரண படுக்கையிலும் மறக்காது கண்மணியே.....


எது நியாயம்...?எது பாவம் ..?

இருவருக்கும் தோன்றவில்லை..

அது இரவா..?அது பகலா..? அதை பற்றி அறியவில்லை..!


யார் தொடங்க ? யார் முடிக்க ?

ஒரு வழியும் தோன்றவில்லை - இருவருமே

தொடங்கிவிட்டோம் இது வரைக்கும் கேள்வி இல்லை


அச்சம் களைந்தேன் - ஆசையினை

நீ அனைத்தாய்


ஆடை களைந்தேன் - வெட்கத்தை

நீ அனைத்தாய்


கண்ட திருக்கோலம் கனவாக மறைந்தாலும்
கடைசியில் அழுத கண்ணீர் கையில் இன்னும் ஒட்டுதடி


உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணித் துளியும்
மரண படுக்கையிலும் மறக்காது கண்மணியே

No comments:

பார்த்ததில் பிடித்தது....